.

Tuesday, December 28, 2010

தமிழ்மணம் விருதுகள் - இரண்டாம் சுற்றில் நான்!

தமிழ்மண விருதுகளின் முதல் சுற்றில் இருந்து இரண்டாம் சுற்றுக்கு என்னுடைய பதிவுகளும் முன்னேறி இருக்குங்க.. காலையில இருந்து ரொம்ப சந்தோசமாக இருக்கேன்.. உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றிங்க..

அடுத்த சுற்றிற்கு முன்னேறி இருக்கற என்னுடையப் பதிவுகள் மற்றும் அதன் பிரிவுகளைக் கீழே கொடுத்திருக்கேங்க..

பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
திகில் திருமணப் பயணம் (http://abdulkadher.blogspot.com/2010/08/blog-post_26.html)


பிரிவு: செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்பெங்களூரில் ஒரு ஃபிளை "ஓவர்" (http://abdulkadher.blogspot.com/2010/08/blog-post_14.html)



பிரிவு: உலக சினிமா விமர்சனங்கள், குறும்படங்கள், திரைப்படக்கலை, மாற்று சினிமா தொடர்பான படைப்புகள்

Shutter Island - திரைவிமர்சனம் (http://abdulkadher.blogspot.com/2010/10/shutter-island.html)


இரண்டாவது சுற்றுக்கு வாக்களிப்பதற்கான இணைப்பை கீழே இணைத்திருக்கிறேன்.

http://www.tamilmanam.net/login/tmawards_2010_vote.php

முதல் சுற்றில் முன்னேறி இருப்பதே.. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குங்க..

என்னோட நன்றியை மீண்டும் உங்க எல்லாருக்கும் தெரிவிச்சுக்கிறேன்..



Monday, December 27, 2010

அலுவலக அரசியல்கள்

ஒரு அலுவலகத்தில் சாதாரண ஒரு பணியாளராக வேலைக்கு சேர்கிறோம்.. அங்கே மேலும் மேலும் நாம உயரனும்னா.. நிறைய விசயங்கள் செய்ய வேண்டியிருக்கு.. எனக்கு தெரிந்த சில விசயங்களைப் பற்றி இங்கே எழுதறேன்..

புதியதாக ஒரு அலுவலகத்தில் சேர்ந்தவுடன்.. கொடுக்கற வேலையை செய்தோமா.. போனோமான்னு இருந்தால்.. அது பத்துடன் பதினொன்று என்றாகிடும்.. அதனால நம்முடைய திறமையை அங்கே நிரூபிக்கனும்.. எப்படி நிரூபிக்கறது.. ஒரு 10 பேர் மட்டும் வேலை பார்க்கும் ஆபிஸ்ல நம்மை முன்னிலைப் படுத்தனும்னு நினைத்தால் ரொம்ப ஈசிங்க.. கொஞ்சம் ஹார்டு ஒர்க் பண்ணிக் காமித்து.. மற்றவர்களை விட அவுட்புட் அதிகமாகக் காமித்தாலே போதுமானது.. நிர்வாகத்தின் கவனத்திற்குப் போயிடுவோம்.. அதை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வது நம்ம கையில்தான் இருக்கு..

நாம் வேலையில் சேர்ந்திருப்பது ஒரு பெரிய நிறுவனம்.. நம்முடைய பிராஜக்ட்லயே குறைந்தது.. 100 பேரூக்கு மேல் வேலை செய்யும் இடம்.. இங்கே எல்லாரையும் விட அதிக நேரம் வேலை பார்க்கிறேன்.. ஹார்டு ஒர்க்கை நிரூபிக்கிறேன்னு திட்டம் போட்டால் அது முடியாது.. எதை நிரூபிக்கறதாக இருந்தாலும்.. நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஆபீஸ் நேரத்துலதான் செய்யனும்.. ஏன்னா.. பெரிய நிறுவனங்கள் எல்லாம் 24 மணிநேரமும் ஷிஃப்ட் பேசிஸ்ல இயங்கக் கூடியவை.. நம்முடைய வேலை நேரம் முடியறதுக்கு 5 நிமிடம் முன்னதாகவே சிஸ்டம் வேனும்னு அடுத்த ஷிஃப்டுக்கு லாகின் பண்றவங்க வந்து நின்னுடுவாங்க.. அதனால் இம்மாதிரியான நிறுவனங்களில் தனித்திறமைகளை முன்னிறுத்துவதன் மூலமாகவே பெயர் வாங்க முடியும்..

தனித்திறமைன்னா என்ன?.. அவங்க வேலை கொடுக்கறாங்க நாம செய்றோம்.. இதுல என்ன தனித்திறமையை வெளிக்காட்டறதுன்னு கேக்கறீங்க இல்லையா.. முதல் ஸ்டெப் நிறையப் பேசனும்.. மனசுல தோன்றதைப் பயப்படாமக் கேக்கனும்.. ஒரு ட்ரைனிங் வைக்கறாங்க அப்படின்னா.. அங்கே நமக்கு பல சந்தேகங்கள் உண்டாகலாம்.. சரி பக்கத்துல இருக்கறவன் புரிஞ்சுட்டிருப்பான்.. வெளியே போய் கேட்டுப்போன்னு திங்க் பண்ணாம.. உடனே நம்முடைய சந்தேகங்களைக் கேக்க ஆரம்பிக்கனும்.. கேள்வி கேக்க தயங்கறோம்னா.. ஒன்னு லேசினெஸ் காரணமாக இருக்கனும்.. அல்லது ஆங்கிலம் பிரச்சினையாக இருக்கலாம்.. இங்கே முதல் வகையை விட்டுடலாம்.. ரெண்டாவது கேட்டகரியை எடுத்துக்குவோம்..

தமிழ்நாட்டுல இருந்து வர்றவங்க.. பெரும்பாலும் தமிழ் மீடியம் படிச்சுட்டு வர்றதால நிறைய மதர்டங் இன்ஃபுலுயன்ஸோட வர்றோம்.. முதல்ல நிறையப் பேருக்கு பேச வர்றதே இல்ல.. அதனால் நாம் ஏதாவது கேள்வி கேட்டு.. அது தப்பாப் போயிட்டா எல்லாரும் சிரிப்பாங்க அப்படிங்கற பயத்துலயே அமைதியாய் உட்கார்ந்திருப்போம்.. அந்தப் பயத்தை விட்டுட்டு.. தப்பாகவே பேசுவோமே.. நாம் எதையோ கேக்க நினைக்கிறோம்.. இவனுக்கு ஆர்வம் இருக்குன்னாவது அவங்களுக்குத் தெரிய வரும்.. இந்த ஆர்வம் நம்மகிட்ட வந்துட்டாலே.. நாம என்ன கேக்க நினைச்சோம்னு யார்கிட்டயாவது கேட்டாவது தெரிஞ்சுக்குவோம்.. அடுத்த முறை நம் மனதில் தோன்றும் வேற கேள்வியை எப்படி கேக்கறதுன்னே தெரியலைன்னாலும் கேக்க தைரியம் வந்துடும்.. முதல்முறை சிரிச்சவங்க.. இந்தமுறை இவன் என்ன கேக்க நினைக்கறான்னு கூர்ந்து கவனிப்பாங்க..

நம்முடைய வேலையை நாம்.. ட்ரைய்னிங்லயே சிறப்பாக செய்யத் தவறி இருக்கலாம்.. புதிய வேலை.. ஒரு மாதிரி கண்ணைக் கட்டி விட்டமாதிரி ஃபீல் பண்ணுவோம்.. கவலைப் படாதீங்க.. வேலையிலயே நேரடியாகப் பிரச்சினையைப் ஃபேஸ் பண்ணிக்கலாம்.. ஏன்னா நிறையப் பேருக்கு.. க்ளாஸ் எடுத்தால் பிடிக்காது.. நேரடியாக வேலை செய்றதுதான் பிடிக்கும் (எனக்கு அதுதான் பிடிக்கும் :-) )..

நெக்ஸ்ட் ஏதாவது நம்முடைய டீமுக்காக ஏதாவது செய்யனும்.. ஏதாவதுன்னா?.. நீங்க வேலை செய்துட்டு இருக்கற பிராஜெக்ட் உங்களுக்கு நல்லாப் பழகினவுடன்.. அதுபற்றி ஒரு சப்பையாக அல்லது உண்மையிலயே அறிவாளியாக இருந்தால் அருமையாக ஒரு பிரசெண்டேசனையோ அல்லது ஒரு புதிய ஒர்க் ஸ்ட்ரக்சரையோ கிரியேட் பண்ணி.. உங்க டீம் மெம்பர்ஸுக்கு கொடுக்கக்கூடாது (;-)).. அது சப்பையாகவே இருந்தாலும் உங்க அணித்தலைவருக்குக் காட்டனும்.. சமயம் வரும்போதெல்லாம் நான் இந்த விசயத்தை செய்தேன்னு சொல்லிக் காட்டனும்.. இந்தமாதிரி எக்ஸ்ட்ரா ஆக்டீவிட்டீஸ் செய்யத் தெரியாதவங்க.. இதுக்கு காக்கா பிடிக்கறான்னு பேர் வைப்பாங்க.. உண்மையில் அவங்களுக்கு எல்லாம்.. என்னடா இவன் நம்மகூட சேர்ந்துட்டு ஆக்டிவா இருக்கானே.. நமக்கு ஒன்னும் தெரியலையேன்னு பொறாமையா இருக்கும்.. ஆனால் அதை அவங்க மனசுகூட ஏத்துக்காது..

சும்மா இந்த வேலையை செய்தால் மட்டும் நல்ல பேர் வாங்கிட முடியுமான்னு நீங்க திங்க் பண்ணலாம்.. இதுவே உங்களுக்குத் தொடக்கமாகவும்.. நல்ல திருப்புமுனையாகவும் அமையும்..

சின்னக் கம்பெனியோ.. பெரிய கம்பெனியோ.. நம்முடைய வேலை சிறப்பாக இருந்தும்.. அங்கீகாரம் இல்லைன்னா.. அங்கே இருக்கறது வேஸ்ட்.. சீக்கிரம் வேற பக்கம் ஜம்ப் ஆகறதுதான் நல்லது.. இல்லைன்னா.. சீக்கிரம் மனசுல ஒரு டிப்ரசன் உருவாகி நம்முடைய திறமைகள் பாழாயிடும்..

இவ்வளவு வேலைகளும் எதுக்கு செய்றோம்.. நமக்கு அங்கே வரும் முன்னேற்றதுக்காகத்தான் இல்லையா.. நமக்கும் அந்த முன்னேற்றம் வரும்.. அப்போ.. உங்க கூடவே டீம்ல இருந்த நண்பர்கள்.. இப்போ உங்களுக்கு கீழே வேலை செய்றமாதிரி நிலை வரும்.. இதற்கு முன்பு ஒரே அணியாக நிர்வாகத்தின் நிறை குறைகளை ஒரு பணியாளரின் பார்வையில் பார்த்துட்டு இருந்திருப்போம்.. நம்முடைய அணித்தலைவர்.. நமக்கு கொடுத்திருக்கற டார்கெட்டோட நியாயமின்மை எல்லாம் அப்போ பேசியிருப்போம்.. இப்போவும் அந்த நியாயம் நமக்குத் தெரியும்.. ஆனால் ஒரு அணித்தலைவராக நமக்குக் கொடுக்கப்பட்ட டார்கெட்.. குறிப்பிட்ட டயத்துல இவ்வளவு டார்கெட்டை முடிக்கனும்ங்கறதுதான்.. சோ ஆட்டோமேட்டிக்கா நம்முடைய டீமுக்கு பிரசர் கொடுக்க ஆரம்பிப்போம்..

ஏற்கனவே நம்முடைய பதவி உயர்வின் காரணமாக சிலர் விலகிப் போயிருப்பாங்க.. இப்போ இந்தப் பிரசர் கொடுக்க ஆரம்பித்தவுடன்.. மீதம் இருப்பவர்களும்.. பார் இவன்.. டீம் லீட் ஆனவுடன் தலைகணம் வந்துருச்சு.. அப்படின்னு பேச ஆரம்பிச்சுருப்பாங்க.. உண்மையில் நம்முடைய வேலைப்பளுவும்.. நம்முடைய டார்கெட்டும் அப்படி இருக்கும்.. நிர்வாகத்துக்கும்.. டீம் மெம்பர்ஸுக்கும் நல்லவிதமாக நடந்துக்கனும்னு நினைத்தால் நமக்கு ஆப்பு விழும்..

இங்கே உதாரணத்துக்கு சொல்லனும்னா.. பாதையில் நடக்கும் போது பாதசாரியாகவும்.. டூவிலர் ஓட்டும்போது அந்த மனநிலையிலும்.. ஃபோர் வீலர் ஓட்டும்போது அந்த மனநிலையில்தான் இருக்கனும்..

இந்தமாதிரி எல்லா விதமான அரசியல்களை சமாளிக்கனும்.. எங்கேயாவது சிலிப்பானால்.. பரமபதம் மாதிரிதான் திரும்பவும்.. பழைய இடத்துக்குத்தான் வருவோம்..

அதுபோல நம்முடைய நிறுவனத்தில் நம்முடைய பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கலாம்.. அதன் காரணமாக நிறுவனத்தில் சில சலுகைகள் நமக்கு வழங்கப்பட்டிருக்கலாம்.. ஆனால் நாம இல்லைனா.. இவங்க இந்த வேலையை செய்திருக்க முடியாதுன்னு நினைப்பை வளர்த்தால்.. நம் மனதில் அகங்காரம் வந்து சீக்கிரம் அது வெளிப்படும்.. அது வேண்டாம்.. நாராயண மூர்த்தி சொன்னமாதிரி நம்முடைய நிறுவனம் எப்போ நம்மை விரும்பறதை நிறுத்துவாங்கன்னு சொல்லவே முடியாது.. அதனால் நம்ம வேலையை என்றைக்குமே கரெக்டாக செய்வோம்.. :-)

டிஸ்கி 1: நண்பர்கள் இருவர் ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்போது.. ரெண்டு பேரும் நண்பர்கள் என கம்பெனிக்குள்ள காட்டிக்காம இருந்தால்.. நம்மைப் பற்றி சக பணியாளர்கள் பேசும் விசயங்களையும்.. நமக்கு மேல இருக்கறவங்க பேசற விசயங்களையும் தெரிஞ்சுக்க முடியும்.. ட்ரை பண்ணிப் பாருங்க.. அனைத்தும் அரசியலே.. :-)

Saturday, December 25, 2010

தமிழ்மிண்ட் அராஜகங்கள்..

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பதிவர் இம்மாதிரி பதிவிட்டிருந்தார்.. தமிழ்மிண்ட்ல ஜாயின் பண்ணுங்க.. உலக நடப்புகள் மற்றும் உங்களுக்கு எந்த விசயங்களில் விருப்பம் இருக்கோ.. அந்த விசயங்களை எல்லாம் உங்க மொபைலுக்கு மெசேஜ் அனுப்பி உடனுக்கு உடனே தெரிவிப்போம்.. உங்களுக்கு எந்த டைம்ல மெசேஜஸ் வரவேண்டாம்னு நினைக்கறீங்களோ.. அந்த டைம் மென்சன் பண்ணிட்டால்.. அந்த சமயங்களில் உங்களுக்கு எந்த மெசேஜும் அனுப்ப மாட்டோம்.. அதுபோல உங்களுக்கு எங்க சேவை பிடிக்கலைனா "NO MINT" அப்படின்னோ என்னவோ டைப் பண்ணி அனுப்பினா.. இந்த சேவையில் இருந்து நீங்க விலகிடலாம்னு இருந்தது..

நான் நண்பர்கள் அனுப்பியிருக்கும் ஃபார்வேர்டு மெசேஜையே படிக்க மாட்டேன்.. ஆனால் அந்த பிளாக்கர் எழுதிய விதமோ என்னவோ.. நான் அதில் இம்ப்ரஸ் ஆகி.. அவர் குடுத்திருந்த லிங்கிற்குப் போய் பார்த்தேன்.. விளையாட்டு, அரசியல், உலக செய்திகள் அப்படி இப்படின்னு.. நூற்றுக்கு மேல வகைகள் அதில் இருந்தது.. சரி இப்போதைக்கு இருக்கட்டுமேன்னு.. உலக செய்திகள் மற்றும் இன்றைய கருத்துக்கள் அப்படிங்கற இரண்டு தலைப்புகளை தேர்வு செய்து சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்..

சப்ரைப் பண்ணின கொஞ்சம் நேரத்தில் ஒரே ஒரு மெசேஜ் வந்தது.. மெசேஜை ஓப்பன்கூட பண்ணாம டெலிட் பண்ணிட்டேன் அப்போ.. அன்னைக்கு நைட் 10 மணிக்கு ஆரம்பித்தது தொல்லை.. தொடர்ந்து 5 செகண்டுக்கு ஒரு மெசேஜ் அனுப்பிட்டே இருந்தாங்க.. என்னடா இது வம்பாப் போச்சுன்னு.. சேவையை கேன்சல் பண்ண அவங்க குறிப்பிட்டிருந்த நம்பருக்கு.. மெசேஜ் பண்ண.. எங்களால இப்ப உங்க சேவையை கேன்சல் பண்ண முடியல.. கொஞ்ச நேரம் கழிச்சு ட்ரை பண்ணுங்கன்னு மெசேஜ் வந்தது.. சரி காலையில் ட்ரை பண்ணலாம்னு.. மொபைலை சைலண்ட்ல போட்டுட்டு தூங்கிட்டேன்.. அடுத்த நாள் காலையில் பார்த்தால் 89 மெசேஜ் வந்திருந்தது.. ரொம்பக் கம்மியாதான் அனுப்பியிருக்காங்கன்னு நினைச்சுட்டு.. திரும்பவும் ட்ரை பண்ணேன்.. பண்ணேன்.. பண்ணேன்.. அன்னைக்கு முழுக்க நிறைய முறை ட்ரை பண்ணிட்டேன்.. அப்புறம் கொஞ்ச நாளைக்கு ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ட்ரை பண்ணிட்டே இருந்தேன்..

அந்த பிளாக்கோட பேர் தெரியாததால அங்கேயும் போய் திட்ட முடியல.. வேற எப்படி ட்ரை பண்றதுன்னு தெரியல.. ரீசண்டா ஒரு பதிவர்.. தமிழ்மிண்ட்ல ஜாயின் பண்ணுங்க.. நான் அனுப்புற மெசேஜ் மட்டும்தான் வரும்.. உங்களுக்கு தொந்திரவு இருக்காதுன்னு எழுதியிருந்ததைப் படிச்சேன்.. ஆபிஸ்ல வேலை அதிகம் இருந்ததால.. அந்த விண்டோவை அப்படியே ஓப்பன் பண்ணி வைச்சுட்டு.. வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.. அப்படியே மறந்து "Shutdown" பண்ணிட்டேன்..

இன்ஸ்ட்ரக்சன்ல குறிப்பிட்டிருந்த முறைப்படி என்னால் அந்த சேவையை நிறுத்த முடியல.. உங்களுக்கு ஏதும் தெரிந்தால் சொல்லுங்க..

இதில் நிறைய விளம்பரங்கள் வருது.. அதனால நிறையப்பேர் இதை கூகுள்கிட்ட இருந்து அவுட்சோர்ஸ் எடுத்துப் பண்றாங்களான்னு தெரியல.. இந்த சேவையைக் குறை சொல்லல.. எனக்கு வேண்டாம்னுதான் சொல்றேன்.. :-)..

"9870807070" இந்த நம்பர்ல இருந்துதான்.. தினமும் குறைந்தது 20 மெசேஜாவது வருது.. யாருக்கும் வழி தெரிந்தால் சொல்லுங்க ப்ளீஸ்..

டிஸ்கி: இதை ஒரு பதிவாகப் போடனும்ங்கறது என் எண்ணம் இல்ல.. ஆனால் இந்த சேவையைப் பயன்படுத்தச் சொல்லி இரண்டு பதிவுகளை நான் படிச்சிருக்கறதால.. அதை உபயோகப்படுத்திய என்னுடைய நிலையையும் தெரியப்படுத்தவே இந்தப் பதிவு..

Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு - திரை விமர்சனம்

கமல்ஹாசன், மாதவன், ரமேஷ் அரவிந்த் கூட்டணினாலே.. ஒரு பெரிய காதல் நகைச்சுவைப் படத்தைக் கொடுக்கப் போறாங்கன்னு நினைச்சுட்டு.. வேற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலே போனேன்.. படம் ஆரம்பிச்சதுல இருந்து.. கடைசி வரைக்குமே.. ஒவ்வொரு டயாலாக்கும் தத்துவமா உதிர்க்கிறாங்க.. இரண்டு வார்த்தைக்கு ஒரு வார்த்தை ஏதாவது நச்சுன்னு கருத்து வந்து விழுது.. படத்தோடவே ஒரு மெலிதான காமெடியை உணர முடியுது.. கடைசி ஒரு 45 மணிநேரம் மட்டும்.. முழு நகைச்சுவை.. உண்மையில் அவ்வளவு நேரம் ஓடிய படத்துக்கும்.. கடைசிக் காட்சிகளுக்கும் ஒத்து வரல.. ஆனால் ரசிக்க முடியாதபடி இல்ல.. நன்றாகவே இருந்தது..

படத்தோட டைட்டிலே ரொம்ப சிம்பிளாகப் போட்டாங்க.. எந்த கிராபிக்ஸும் இல்ல.. சாதாரணமாக எழுத்துப் போடறாங்க.. இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம்.. கமல்ஹாசன்.. ஆனால் கதை ஏற்கனவே இரண்டு உலகப்படங்களில் இருந்து கமல் சுட்டுட்டார்னு படிச்சேன்.. சுட்ட கதையாக இருந்தாலும்.. இந்த வருடத்தில் ஒரு அருமையான படமே..

இப்படத்தில் திரிஷா.. ஒரு நடிகையாகவே வர்றாங்க.. திரிஷாவை மாதவன் காதலிக்கிறார்.. முதல் காட்சியிலயே ஒரு பாடல்காட்சி.. அதில் சூர்யாவுடன்.. திரிஷா சூட்டிங்ல இருக்கறமாதிரி அந்தப் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கு.. சூட்டிங் ஸ்பாட் வர்ற மாதவன்.. திரிஷாவையும் சூர்யாவையும்.. சந்தேகப்பட்டு திரிஷாகூட சண்டைபோடறார்.. ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டே மலைப்பாதையில் கார் ஓட்டிட்டு வர்றப்போ.. எதுத்து வர்ற வண்டியைப் பார்க்காமல் ஒரு ஆக்சிடெண்ட் ஆயிடுது.. எப்படியோ சமாளித்து.. வண்டியை நிப்பாட்டித் திரும்பிப் பார்க்க.. ஆக்சிடெண்ட் ஆன மற்றொரு வண்டியைக் காணோம்.. சரி இடிச்சுட்டு ஓடிட்டாங்க போலன்னு நினைச்சுட்டு.. திரிஷாவும் மாதவனும் சண்டையைத் தொடர்றாங்க.. இதனால மனசு வருத்தப்பட்டு.. மன மாறுதலுக்காக அவருடைய தோழி சங்கீதா இருக்கற ஊருக்குப் போறார் திரிஷா..

இங்கேதான் கமல் அறிமுகமாகிறார்.. இவர் யாருன்னா.. திரிஷாவை ஃபாலோ பண்ணி அவர் வேற யார் கூடயாவது தொடர்பு வைச்சிருக்காரான்னு மாதவன் துப்பறிய அனுப்பி வைத்த ஒரு டிடெக்டிவ்.. சங்கீதாவை அறிமுகப்படுத்தியதில் இருந்து திரிஷாவுக்கு அதிகமான டயலாக்கே இல்லை.. சங்கீதாவே நிறையப் பேசறார்.. அசால்ட்டா நிறைய லந்தடிக்கறார்.. அவருடைய குழந்தைகளாக வரும் கதாப்பாத்திரங்களும் சூப்பர்..

ஒருகட்டத்தில் திரிஷா மற்றும் சங்கீதாவுடன் கமல் நட்பாகிறார்.. அப்போது கமல் கூறும் அவருடைய ஃபிளாஸ்பேக்கில் ஒரு ஆக்சிடெண்ட் வருது.. அந்த ஆக்சிடெண்ட் திரிஷா பண்ணினதுதான்.. அதனால் குற்ற உணர்ச்சியில் திரிஷா தவிக்கிறார்.. கமலும் பணத்தேவைக்காக.. திரிஷா யார்கூடவோ சுத்தறார்ன்னு மாதவன்கிட்ட பொய் ரிப்போர்ட் கொடுத்துட்டு குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார்.. ஒருபட்சத்தில் கமலுக்கு நடந்த ஆக்சிடெண்டுக்கு காரணம் தான்தான்னு திரிஷா சொல்ல.. கமல் அதை ஸ்போட்டிவாக எடுத்துக்கறார்.. ரெண்டு பேருக்குள்ளேயும் இப்போ காதல்..

மாதவன் திடீர்னு கமலையும்.. திரிஷாவின் மோசடியையும் நேர்ல பார்க்கனும்னு வர.. அப்போ இருந்து காமெடி+மொக்கை ஆரம்பம்.. கடைசியில் கமலும் திரிஷாவும் சேர்றாங்க.. சங்கீதாவும், மாதவனும் சேர்றாங்க.. படம் ஓவர்..

படத்தின் முதல் காட்சியில் இருந்து வசனங்கள் எல்லாம் கவிதை மாதிரியே பேசறாங்க.. நிறைய ஆழ்ந்த கருத்துள்ள வசனங்கள்.. மாதவன் அவருடைய பார்ட்டை சிறப்பாகவே செய்திருக்கிறார்.. கமலைப் பற்றி சொல்லவே வேண்டாம்.. அருமை..

அடுத்து.. படத்தின் ஹீரோயின் திரிஷாவை விட.. சங்கீதாவே மனசில் நிக்கிறார்.. காமெடிக் காட்சிகளில் அவருடைய நடிப்பு சூப்பர்.. அதுவும்.. கடைசிக் காட்சிகளில்.. மாதவனிடம் மாட்டிக் கொள்ளவிருக்கும் கமலைக் காப்பாற்ற போட்டப் பிளான் சொதப்ப.. கமல் தன்னைத் துப்பறிய வந்த ஒரு டிடெக்டிவ்ன்னு தெரியாத திரிஷா.. அதே இடத்துக்கு வர.. அங்கு நடக்கும் லூட்டியில் தியேட்டர் முழுவதும் ஒரே சிரிப்பு.. அந்தக் காட்சிகள் சிறப்பாக அமைந்ததற்கு சங்கீதாவின் நடிப்பே காரணம்..

ரமேஷ் அரவிந்தை அடையாளமே தெரியல.. ரமேஷ் அரவிந்த் பார் எப்படி ஆயிட்டார்னு.. கூடபடத்துக்கு வந்திருந்த நம்ம பிரியமுடன் ரமேஷ் சொல்லத்தான்.. ஓ அப்படியான்னு பார்த்தேன்..

கமல் ஃபிளாஸ்பேக் சொல்ல ஆரம்பிக்கும் போது.. வரும் பாடல் காட்சி.. ஆக்சிடெண்ட் ஆனதில் இருந்து.. காட்சிகள் பின்னோக்கி நகர்வதுபோல காமிச்சிருப்பாங்க.. பதிவாக்கிய விதம் அருமை.. ஆனால் காட்சிகள் எல்லாம் கமலுடன் சேர்ந்து பின்னோக்கி செல்லும்போது.. கமலின் வாய் அசைவுகள் மட்டும்.. பாடல் வரிகளை கரெக்டா உச்சரிச்சது எப்படின்னு தெரியல.. ரொம்ப நல்லாயிருந்தது..

திடீர்னு ஊறுகாய் மாதிரி.. ஓவியாவும் வர்றார்.. அதைப் படத்துலயே மாதவன் நக்கலாக சொல்லிக் காமிச்சிட்டார்..

இந்தப் படத்தின் பிரச்சினைக்குரிய கவிதை.. இரண்டுமுறை வருது..

கடைசிக் காட்சிகள் காமெடியாக இருந்தாலும் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது..

மன்மதன் அம்பு - கடைசி 45 நிமிடக் காட்சிகளைத் தவிர்த்தால் இரண்டு முறை பார்க்கலாம்..

Tuesday, December 21, 2010

மொபைல் மோசடிகள்


புதுசா காஸ்ட்லி மொபைல் வாங்கப்போறீங்களா.. இதைப் படிங்க முதல்ல..

நம்மவர்களுக்கு இப்போ மல்ட்டி மீடியா மொபைல் யூஸ் பண்ற மோகம் முழுவதும் பரவிக்கிடக்கு.. ஒரு லேப்டாப் வாங்கற பணத்துக்கு ஐபோன், ஹெச்.டீ.சி போன்ற மொபைலகள் மார்கெட்ல கிடைக்குது..

இந்த பதிவு எழுதறதுக்காக காஸ்ட்லியஸ்ட் மொபைல் லிஸ்ட் தேடிப்பார்த்தேன்.. ஒரு ஆப்பிள் ஐஃபோன் விலை 100000 ரூபாய், ஒரு ஹெச்.டீ.சி மாடல் 1,20,000ரூபாய் (அப்புறம் வைரத்துல செய்தது, தங்கத்துல செய்ததுன்னு நிறைய மொபைல்ஸ் 25,00,000, 1,00,00,000 அப்படின்னு எல்லாம் இருந்தது).. இவ்வளவு காஸ்ட்லி மொபைல் வாங்கி என்ன பண்றதுன்னு தெரியல.. ஆனாலும் நம்ம மக்களுக்கு மல்டி மீடியா மொபைல்ஸ் வைச்சிருக்கறது ஒரு கெளரவப் பிரச்சினையாகவே நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க.. ஊர்ல நிறையப் பேர் 20000, 25000 ரூபாயிக்கு மொபைல்ஸ் வாங்கி வைச்சிருக்காங்க.. அவங்களுக்கு அதுல கால் பண்றது தவிர வேற எதுவுமே தெரியல.. அடப்பாவிகளான்னு இருக்கும்.. கேட்டால்.. இந்த மாதிரி மொபைல்ஸ் வைச்சிக்கிட்டாத்தான் கெளரவம்னு சொல்றாங்க..

அப்புறம் காலேஜ் போற பசங்க அதிகமாக மல்டி மீடியா மொபைல்ஸ் யூஸ் பண்றாங்க.. இங்கே மேட்டர்.. இவ்வளவு விலையில் மொபைல் எதுக்கு வாங்கறாங்கன்னு இல்ல.. இந்தமாதிரி மொபைல்ஸ் வாங்கினதுக்கு அப்புறம் எப்படிப் பாதுக்காக்கறாங்க அப்படிங்கறதுதான்..

நோக்கியாவுல 1100, 1110 மாதிரி மொபைல்ஸ் எல்லாம் 2000 ஆம் ஆண்டுவாக்குல ரொம்ப பிரபலமாக இருந்தது.. ரஃப் யூஸுக்கு ஏத்த மொபைல்.. தூக்கி எறிந்து விளையாடலாம்.. எல்லாம் அவ்வளவு உறுதியாக இருந்துச்சு.. நான் உபயோகப்படுத்திட்டு இருந்த ஒரு 1100 மொபைல்.. ஒருமுறை கை தவறி ரெண்டாவது மாடியில் இருந்து விழுந்தது.. அப்போ விழுந்திடுச்சேன்னு ஒரு பதட்டமும் இல்ல.. பேட்டரியும் பேனலும் தனித்தனியே கிடந்துச்சு.. எல்லாத்தையும் சேர்த்ததுக்கு அப்புறம் கும்முன்னு ஒர்க் ஆயிடுச்சு.. அவ்ளோதான்..

இப்போ நிறைய மல்டி மீடியா மொபைல்ஸ்.. நமக்கு தகுந்த விலைகள்ல இருந்து.. ரொம்பக் காஸ்ட்லியாகவும் கிடைக்குது.. ஹேண்டி, சிலிக்கி, பெரிய சைஸ்னு எல்லா மாதிரியும் கிடைக்குது.. எல்லா மொபைல்களிலுமே.. பிச்சர் கிளாரிட்டிக்காக எல்.சி.டி. ஸ்கிரீன் போட்டுத்தான் வருது.. ஏதாவது சிறிய பிரசர்.. மொபைல் மேல விழுந்தாலும் ரொம்பக் கேர்புல்லாகப் பார்த்துக்க வேண்டியிருக்கு.. தப்பித்தவறி டிஸ்ப்ளே உடைந்ததுன்னா.. அவ்ளோதான்.. 2000, 3000 ரூபாயிக்கு வேட்டுதான்.. சில மொபைல்களோட ஒரிஜினல் விலையே அவ்ளோதான் இருக்கும்.. அதனால ரொம்பக் கேர்புல்லாகப் பார்த்துக்க வேண்டியிருக்கு..

இந்த மல்டிமீடியா மொபைல்கள்ல வாங்கக்கூடாத ஒரு மாடல் ஃபிளிப் டைப்.. அதாவது ஸ்கீரினை உந்தி பிரஸ் பண்ணினா.. அது மேலே போய்.. மொபைல் கீபோர்டு இருக்கறதைக் காட்டும்.. ஏதாவது கால் வந்தால் அப்படியே அட்டெண் பண்ணலாம்.. அப்படி மாடல்.. இந்த மொபைல்ல ஏதாவது சின்ன ஸ்டார்ட் அப் பிரச்சினை ஏற்பட்டால் கூட.. மொபைலை அப்படியே மறந்திட வேண்டியதுதான்.. ஏன்னா அந்த மாதிரி மாடல்கள்ல சர்வீஸ் பார்க்கறதுக்காக கழட்டும்போது ஸ்க்ரீன் இருக்கற பார்ட்டைக் கலட்டனும்னா.. அப்படியே ஒரு ஸ்க்ரூ டிரைவர் வைச்சி நெம்பிதான் எடுப்பாங்க.. கண்டிப்பாக வளைஞ்சுபோயிடும்.. திரும்பவும் பிக்ஸ் பண்றப்போ பினிஷிங் வராது.. அதனால மொபைலை சர்வீஸ் குடுக்கும் போதே.. சார் ஆபரேசன் சக்ஸஸ் ஆயிடும்.. ஆனால் பேசண்ட் செத்துடுவாங்க.. உங்களுக்கு ஓகேன்னா.. எடுத்துக்கறோம்னு சொல்வாங்க.. அடப்பாவிங்களா!! இந்த விசயங்களை மொபைல் வாங்கறப்போ ஏண்டா சொல்லலைன்னு கேட்டால் பதில் இருக்காது.. அதனால நண்பர்களே!!.. ஃபிளிப் மாடல்ல ஆசை வைச்சிருக்கறவங்க கொஞ்சம் உஷார்..

சரி இப்போ நாம மொபைல் பாதுகாப்பு பிரச்சினைக்கு வருவோம்.. 10000 ரூபாயிக்கு மேல வாங்கற மொபைல்களுக்கு எல்லாம் இப்போ.. இன்ஸூரன்ஸ் கவர் பண்றாங்க.. மொபைல்ல ஏதாவது பிரச்சினைனா.. சரி பண்ணிட்டு இந்த இன்ஸூரன்ஸ் கிளைம் பண்ணிக்க முடியும் (அப்படின்னு சொல்வாங்க..:-) ).. அப்போ கேரண்டி வாரண்டி எல்லாம் தர்றாங்களே.. அதெல்லாம் எதுக்குன்னு இப்போ கேக்காதீங்க.. :-)

என் நண்பன் ஒருவன்.. தனக்கு மொபைல் வாங்கறதுக்கு என்னையும் கூப்பிட்டிருந்தான்.. போய் நிறைய மாடல்ஸ் பார்த்தோம்.. அவனுக்கு ஃபிளிப் டைப்னா ரொம்ம்ம்பப் பிடிக்குமாம் (:-D).. நிறைய ஃபிளிப் டைப் மாடல்ஸ் பார்த்தான்.. அவன் வாங்கியது சோனி எரிக்சன்ல ஒரு ஃபிளிப் மாடல்.. அப்போ அந்த மொபைலின் விலை 14000ரூபாய்.. 10000ரூபாயிக்கு மேலே மொபைல்ஸ் வாங்கினால்.. இன்ஸூரன்ஸ் கவரேஜ் இருக்கு சார்.. அதுக்கு நீங்க எக்ஸ்ட்ரா 1000ரூபாய் பே பண்ணினால் போதும்.. லைஃப் டைம் கவரேஜ் சார்.. அப்படின்னு கடைக்காரன் சொல்ல.. இதுவும் நல்லாயிருக்கேன்னு நண்பனும் போட்டுட்டான்..

இப்போ கொஞ்ச நாட்களுக்கு முன்பு அவனுடைய மொபைல் கீழே விழுந்து மொபைல் டிஸ்ப்ளே போயிடுச்சு.. செலவு 3200ரூபாய்.. நான் மேலே சொன்னமாதிரி.. இந்த டைப் மொபைலை ஓப்பன் பண்ணினா.. மொபைல் ஹேங் ஆகற பிரச்சனை வந்தாலும் வரும்.. பினிஷிங் சரியாக வராதுங்க.. ஓகேன்னா பண்ணிடலாம்னு சொன்னாங்க.. வேற வழி.. சரின்னு ஒத்துக்கிட்டாச்சு.. மொபைல் ரெடியாகி வந்தாச்சு.. சரி இப்போ இன்ஸூரன்ஸ் கிளைம் பண்ணிக்கலாம்னு.. அந்த பில்லை அட்டாச் பண்ணி அனுப்பினால்.. மொபைல் டிஸ்ப்ளே இதுல நாங்க கவர் பண்ணலை.. உங்களுக்கு பணம் கிடைக்காதுன்னு சொல்லி.. திரும்ப எல்லா டாக்குமெண்ட்ஸையும் அனுப்பி வைச்சுட்டாங்க.. அப்புறம் என்னத்துக்கு அந்த இன்ஸூரன்ஸ் கவரேஜ்ஜுன்னு தெரியல.. மொபைலும் கடைக்காரன் சொன்னமாதிரி ஹேங் ஆகற பிரச்சினை வர ஆரம்பிச்சுடுச்சு..

காஸ்ட்லி மொபைல்ஸ் வாங்கும்போது.. இன்ஸூரன்ஸ் போடற ஐடியா இருந்தால் கொஞ்சம் யோசிச்சுக்கங்க.. கண்டிப்பாக பணம் வேஸ்டுதான்..

Saturday, December 18, 2010

பெண்ணுக்குள் இருக்கும் கடவுள்

பெண்கள் மனசுல என்ன இருக்கு?.. அவங்க என்ன விரும்பறாங்க.. இதெல்லாம் என்ன பி.எச்டி படிச்சுட்டு வந்தாலும் தெரிஞ்சுக்க முடியாது.. ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய மனசுல ஆயிரம் இரகசியங்களையும் விருப்பங்களையும் குறைகளையும் மறைச்சு வைச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க.. மிகவும் சந்தோசமாக இருக்கறதால நினைச்சுட்டு இருக்கற பெண்ணுக்குக்கூட அவங்க ஆழ்மனசுல நிறைய விருப்பங்களும்.. தன்னுடைய இணையின் மீது குறைகளும் இருக்கத்தான் செய்கிறது..

ஒரு ஆண்.. பெண் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு.. அவங்களோட விருப்பங்களை நிறைவேற்ற ஆரம்பித்தால்.. அந்தப் பெண் பாக்கியசாலிதான்.. இங்க நான் சொல்றது அவங்களுக்கு நகை, புடவை வாங்கிக் கொடுப்பதைப் பற்றில்ல..

ஒரு ஆண்.. பெண்ணை விட உடல் அளவில் பலம் கொண்டவனாக இருந்தாலும்.. மனதளவில் பெண்களே மிகவும் பலம் கொண்டவங்களாக இருக்காங்க.. சிறுவயதில் இருந்தே.. உடலளவில் மிகுதியான வலிகளை அனுபவிச்சுட்டு இருக்கறதால்கூட மனதளவில் மிகுந்த தைரியத்தைக் கொண்டிருக்காங்கன்னு நினைக்கிறேன்..

உலகத்துல ஆண்களே.. பெண்களை ஆள்கிறவர்களாக நமக்குள்ள இல்லூசன் இருக்கு.. ஆனால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் ஆயிட்டாலோ.. இல்ல காதலிக்க ஆரம்பிச்சிட்டாலோ.. முதல்ல பெண்தான் இதுக்குண்டான காரியங்கள்ல இறங்கறாங்க.. ஆணைத் தன் வசப்படுத்தி ஆளனும்ங்கறதுக்கு முதல் ஸ்டெப் என்னன்னா.. "ஏங்க நீங்க கரெக்டாக 9 மணிக்கு சாப்பிட்டுடுங்க, உங்க போன் காலை 6 மணிக்கு எதிர் பார்த்துட்டு இருப்பேங்க, 8 மணிக்குள்ள வீட்டுக்கு வந்திடுங்க" அப்படின்னு அன்பாகக் கட்டளையிடுவாங்க.. பெரும்பாலான ஆண்களுக்கு அந்த வார்த்தைகள் ஆரம்பத்துல அப்படியே உருகிப்போய்.. சொல்றதை அப்படியே செய்வாங்க.. உண்மையைச் சொல்லப்போனால்.. அந்தப் பெண் குறிப்பிட்ட நேரம் எப்போ வரும்னு.. 2 மணிநேரம் அல்லது 3 மணிநேரம்னு அவங்க வசதியைப் பொருத்து காத்திட்டு இருக்க ஆரம்பிச்சுடறாங்க.. ஆனால் அது ரியாலிட்டி இல்லவே..

தினமும் சொல்ற நேரத்தைக் கடைபிடிப்பது என்பது முடியாத காரியமாயிடுது.. ஒரு மாதமோ அல்லது அவர்களுக்கு முடியற வரைக்குமோ கேட்பாங்க.. அப்புறம்தான் இந்தப்பெண் தன்னை டாமினேட் பண்றாளோன்னு எண்ணம் வரத்தொடங்கியவுடன் முரண்டு பண்ண ஆரம்பிப்பாங்க.. உடனே பொண்ணுக்கு பொசசிவ்நெஸ் வந்திடும்.. நான் சொன்னதை முன்ன எல்லாம் கேட்டுட்டு இருந்தீங்க.. இப்ப என்ன வந்ததுன்னு சண்டை ஆரம்பிக்கும்..

இந்த அன்புக் கட்டளைகளை பெண்கள் இடும்போதே.. இல்ல அந்த நேரங்கள்ல எனக்கு வேற வேலை இருக்குன்னு ஆண் சொல்லும் போது.. பெண்ணோட முதல் முயற்சி தோல்வியடையுது.. ஆனாலும் மீண்டும் மீண்டும் அதற்குண்டான முயற்சி செய்துட்டேதான் இருப்பாங்க.. அவங்களோட எண்ணம் வெற்றியடையும் வரையோ.. அந்த ஆணிடம் இருந்து அடக்குமுறைகள் கையாளப்படும் வரையோ அந்த முயற்சி தொடர்ந்துட்டேதான் இருக்கும்.. பலர் தனது அன்பைக் கொண்டு இந்த முயற்சியில் ஜெயிச்சிடறாங்க.. சிலர் தோல்வியடையறாங்க..

ஆண் ஆரம்பித்துல இருந்தே தன்னுடைய ரியாலிட்டியை மீறி செயல்படாம இருந்தால்.. எந்த சண்டையும் வராதுன்னுதான் நினைக்கிறேன்.. இதுதான் நான்.. இப்படி நான் இருப்பேன்.. இப்படி உன்னிடம் எதிர்பார்க்கறேன்னு ஒருவருக்கு ஒருவர் பேசிக்கிட்டாங்கன்னா ஒரு புரிதல் வந்திடும்..

காதல் பண்றவங்ககிட்டயும்.. புதியதாக கல்யாணம் நிச்சயம் ஆனவங்ககிட்டயும்தான் இந்த ரியாலிட்டி பிரச்சினை அதிகமாக இருக்கு..

அவர்கள் காதல் மயக்கத்துல ஒருவருக்கொருவர்.. அப்படி இப்படின்னு பீலா விட்டுக்கறதும்.. நைட் முழுக்க தூங்காம பேசிக்கிட்டே இருக்கறதையும் பல இடங்கள்ல பார்க்க முடியுது.. ஆனால் இதே நிலைதான் எப்பவும் தொடருமா?.. கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் நிலைமை மாறுது.. வேறு வேறு இடங்களில் இருந்து கொண்டு காதல் பண்ணிட்டு இருந்தவங்க.. இப்போ பக்கம் பக்கம் ஒரே அறையில்.. கொஞ்ச நாட்கள்ல அவங்க முன்பு செய்துட்டு இருந்த விசயங்கள் போலியாகத் தோன்ற ஆரம்பிக்குது.. அதை ஆண் வெளிப்படையாகக் காட்டறான்.. பெண் அப்படிக்காட்டறது இல்ல.. அதனால் நீங்க முன்ன மாதிரி இல்ல.. அப்போ மட்டும் என்னை அப்படி..இப்படின்னு கொஞ்சத் தெரிஞ்சதான்னு சண்டை ஆரம்பிக்குது.. அதனால் காதல் பண்றவங்களும் சரி.. புதியதாக நிச்சயம் ஆனவங்களும் சரி ரியாலிட்டியை மனசுல வைச்சுக்கிட்டு பழகினாங்கன்னா இந்தப் பிரச்சினை கண்டிப்பாக ஏற்படாது.. மிகைப்படுத்தி நடந்து கொண்ட பிறகு.. உண்மையான நடவடிக்கையைக் காமிச்சாதான் ஒத்துவராது..


நான் தொடக்கத்தில் சொல்லியிருந்தது போல ஒரு பெண்.. ஆணை ஆளமுடியாம தோல்வியடைந்தால்.. அவர்களோட முயற்சி எப்பவும் நின்று போயிடறதில்ல.. அடுத்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள்கிட்ட அந்த எண்ணத்தை செயல்படுத்த ஆரம்பிக்கறாங்க.. அப்படின்னா.. கொடுமைப்படுத்த ஆரம்பிக்கறாங்கன்னு சொல்ல வரல.. அன்பால் கட்டளையிட ஆரம்பிக்கறாங்க.. உதாரணத்துக்கு.. பார் உன் தகப்பன்தான் நான் சொல்றது எதையுமே கேக்கல.. நீயாவது கேள்டா அப்படின்னு சொல்ல ஆரம்பிப்பாங்க.. பிள்ளைக்கு அப்போது என்ன தோனும்.. தனது அப்பா மேல் நல்ல மரியாதையும் அன்பும் இருந்தாலும்.. அம்மா சொல்றதைத்தான் முதல்ல கேக்கனும்னு ஒரு விதை விழுந்திடும்..

பெண்ணின் எண்ணங்கள் ஆரோக்கியமாக இருக்கறவரை அந்தப் பெண்ணுக்கும் சரி.. அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் சரி.. நல்லதாக அமையும்.. பெண்ணின் எண்ணங்கள் தவறாக இருக்கும்போது.. இந்த முயற்சி வெற்றி அடைந்தாலும்.. தோல்வி அடைந்தாலும் கஷ்டம்தான்..

நான் மேல் சொன்ன விசயங்கள்ல.. ஆணோ பெண்ணோ.. யாராவது தன்னுடைய விருப்பங்களில் சிலவற்றைத் தன்னுடைய இணைக்காக விட்டுக் கொடுக்கறதுலதான் வெற்றிகரமான தாம்பத்தியம் அமையுது..

கடவுள் 
உலகைப் படைத்தார்
பெண்
உயிர் கொடுத்தாள்
அம்மா
இவர்தான் என் கடவுள்!

டிஸ்கி: இது ரொம்ப சென்சிட்டிவான மேட்டர்.. இதுல நான் ஆணைதான் அல்லது பெண்தான் உயர்ந்தவங்கன்னு சொல்ல வரல.. இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட முதல் காரணம் என்னவாக இருக்கும்னு யோசிக்கும்போது இப்படியெல்லாம் தோனுச்சு.. சோ இதெல்லாம் கரெக்டாக இருந்தால்.. தப்பிச்சேன்.. தப்பாக இருந்தால் ரொம்பவும் திட்டீடாதீங்க.. நான் கொஞ்சம் பயந்த சுபாவம்.. :-)


படம்: நன்றி கூகுள்

Thursday, December 16, 2010

கிரெடிட் கார்டு "அபாயங்கள்"


கிரெடிட் கார்டு புதுசா யூஸ் பண்ண ஆரம்பிக்கறவங்க.. கஸ்டமர்கேர்ல வேலை செய்றவங்களால.. சந்திக்கற பிரச்சினைகளைப் பற்றி கிரெடிட் கார்டும்.. கஸ்டமர்கேரும்.. அப்படிங்கற பதிவுல சொல்லியிருந்தேன்..

என்னுடைய அந்தப் பதிவை தினமலரும்.. "தெரிஞ்சுக்கோ"ன்னு ஒரு திருட்டுப் பதிவரும் சுட்டிருந்தாங்க.. அந்த விசயத்தை எனக்குத் தெரியப்படுத்திய நண்பர்கள் ராஜா மற்றும் நா. மணிவண்ணன் இருவருக்கும் எனது நன்றிங்கள்..

திருட்டுப் பதிவரின் வலைத்தளத்திற்குப் போய் அனைவரும் திட்ட.. அந்தத் திருட்டுப் பதிவர் (எத்தனை முறைத் திருட்டுப் பதிவர்.. திருட்டுப் பதிவர்ன்னு சொல்றாம் பாருன்னு பார்க்கறீங்களா.. அப்படி சொல்லியாவது மனதை ஆற்றிக்க வேண்டியதுதான்.. :-) ).. என்னுடைய பதிவை அவருடையத் தளத்தில் இருந்து அடுத்த நாள் அழித்து விட்டார்.. தினமலருக்கு நான் இதுவரை மூன்று முறை மெயில் பண்ணிட்டேன்.. அவங்களுக்கு இது யூசுவலான விசயம் போல.. எந்த ரிப்ளையுமே கொடுக்கல.. நிறைய நண்பர்கள் பின்னூட்டத்தில் அவர்களை சட்டப்படி அணுகும்படிக் கூறியிருந்தார்கள்.. என்னுடைய வேலைகளுக்கு மத்தியில் அவர்களை சட்ட ரீதியாக அணுகுவதெல்லாம் முடியாத காரியம்.. ஆனால் எனக்கு ஆறுதலாகவும்.. ஆதரவளித்தும் பேசிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்..

இப்பதிவில் கிரெடிட் கார்டை ரொம்ப காலமாக யூஸ் பண்றவங்க.. சந்திக்கற மோசடிகளைப் பற்றி எனக்குத் தெரிந்த தகவல்களைத் தெரிவிக்கிறேங்க..

கிரெடிட் கார்டில் பல வகைகள் உண்டுன்னு எல்லாருக்கும் தெரியும்.. அதுல பிளாட்டினம் கார்டு வகையில் அதிகமான கிரெடிட் லிமிட் கிடைக்கும்.. நம்முடைய சாலரி மாதம் 50000 ரூபாயைத் தாண்டினால் தொடக்கத்திலேயே பிளாட்டினம் கார்டு தந்திடுவாங்க.. நிறையப் பேருக்கு அவங்களோட கோல்டு மற்றும் டைட்டானியம் கார்டுல இருந்து அப்கிரேட் பண்ணிக்கூட பிளாட்டினம் கார்டு தருவாங்க.. அவங்க எல்லாம் பெர்பெக்டா தங்களோட பில்லைக் கட்டியிருப்பாங்க.. அதான் பிளாட்டினம் கார்டு கொடுத்திட்டாங்கன்னு நீங்க நினைத்தால் அதான் தப்பு..

அந்த கஸ்டமர்ஸ் ஒவ்வொரு மாதமும் அதிகமாக டிரான்சக்சன்ஸ் காமிச்சு.. அடிக்கடி சரியான தேதியில பில் கட்டாம விட்டு.. அப்புறம் வட்டியோட கட்டற ஆளுங்களாக இருப்பாங்க.. சோ.. இன்னும் கிரெடிட் லிமிட்டை அதிகம் பண்ணிக் கொடுத்தால்.. அதையும் செலவு பண்ணிட்டு.. இன்னும் அதிகமாக தண்டம் கட்டுவாங்கள்ல.. அந்த பிளான்தான் பேங்க்காரங்களுக்கு..

இந்த ஆண்டு முடிந்தால்.. நான் என்னுடைய கோல்டு கார்டை வாங்கி மூன்று ஆண்டுகளாகிறது.. எந்த அப்கிரேடும் இதுவரை இல்ல.. அதே கிரெடிட் லிமிட்தான்.. ஏன்னா இந்த மூன்று ஆண்டுகளில் ஒருமுறைகூட பில்டேட் தவறினதே இல்ல (அடுத்த மாத பில்லை நினைத்தால்தான் பக்குன்னு இருக்கு.. :-( ).. சோ என்னால எந்த யூஸும் இல்ல அவங்களுக்கு அதான்..

கிரெடிட் கார்டு மூலமாக லோன்கூட அப்ளை பண்ணிக்க முடியும்.. என்னுடைய கிரெடிட் லிமிட்ல இருந்து 75% சதவீதத்தை லோனாக வாங்கிக் கட்டமுடியும்.. வட்டி தீட்டிடுவாங்க..
என்னுடயை நண்பர் ஒருவர்.. தன்னுடைய கிரெடிட் கார்டில் இருந்து 30000 ரூபாய் லோன் வாங்கி ரெண்டு மாதத் தவணையைக் கரெக்டாகக் கட்டியிருந்தார்.. அவருக்கு கஸ்டமர்கேர்ல இருந்து போன்.. சார் உங்க டிரான்ஸக்சன்ஸ் எல்லாம் நல்லா இருக்கு.. அதனால உங்களுக்கு பிளாட்டினம் கார்டு இஷ்யூ பண்றோம் சார்.. கங்கிராட்ஸ்னு சொல்ல.. நண்பருக்கு பயங்கரமான சந்தோசம்.. ஆஹா!! கிரெடிட் லிமிட் நிறைய வருமே.. சூப்பர்னு நினைச்சுட்டு ஓகே சொல்லிட்டார்.. ஒரு வாரத்துல பிளாட்டினம் கார்டும் வந்திடுச்சு.. தொடர்ந்து அடுத்த மாத பில்லில் வந்தது அவருக்கு ஆப்பு..

அவருடைய லோன் அமெளண்ட் 30000 ரூபாயில் இருந்து 78000 ரூபாய் என்று ஆகியிருந்திருக்கு.. அந்த அதிர்ச்சியை எப்படித் தாங்கிக்க முடியும்.. ஆடிப்போயிட்டார்.. கஸ்டமர்கேருக்கு போன் பண்ணி விசயம் கேக்க.. சார் கன்சர்ன் டிபார்மெண்டுக்கு டிரான்ஸ்பர் பண்றோம் பண்றோம்னு காலை மாத்திவிட்டுட்டே இருந்தாங்க.. அப்படியே லைன் கட்டாயிடும்.. கஸ்டமர்கேருக்கு ஃபோன் பண்றது எல்லாம் டோல்பிரியும் கிடையாது.. மனிதர் ரொம்ப நொந்து போயிட்டார்.. ஒருமாதம் பக்கம் இப்படியே மல்லுக்கட்டிட்டு இருந்தார்.. ஒரேஒரு முறை விசயத்துக்கு இப்படி ரிப்ளை வந்திருக்கு..
"சார் உங்க கார்டை அப்கிரேட் பண்றப்போ ஏதாவது பிரிவியஸ் பேலன்ஸ் பெண்டிங் இருந்தால்.. வட்டியோட இன்கிரீஸ் பண்ணிடுவோம் சார்.. உங்களுக்கு கார்டு இஷ்யூ பண்றப்பவே அக்சப்டன்ஸ் கேட்டுத்தான் பண்ணியிருப்பாங்க" அப்படின்னு ரிப்ளை..

நண்பருக்கு பிரசர் பயங்கரமாக ஏறிடுச்சு.. இனி இவனுங்க வேலைக்கு ஆகமாட்டாங்கன்னுட்டு.. அவர் கஸ்டமர்கேருக்கு போன் பண்ணிய கால் ஹிஸ்டரி, தன்னுடைய லோன் டீட்டெய்ல்ஸ் எல்லாத்தையும் ரிசர்வ் பேங்க்கிற்கு தெளிவாக எழுதியும்.. டாக்குமெண்ட்சை அட்டாச் பண்ணியும் அனுப்பிட்டார்..

ரிசர்வ் பேங்க்கிற்கு அனுப்பிய ரெண்டாவது நாள்.. அந்த பேங்க்கோட மேனேஜர் போன் பண்றார்.. சார் ரிசர்வ் பேங்குல எதுக்கு கம்ப்ளைண்ட் பண்ணீங்க.. உங்களோட பிரச்சனையை உடனே சால்வ் பண்றோம்.. நீங்க எப்பவும் கட்டவேண்டிய அமெளண்டை இப்போ இருந்து கட்டுங்கன்னு சொல்லியிருக்கார்.. என் நண்பர் இந்த ஏய்க்கற வேலையெல்லாம் வேண்டாம்.. என்னுடைய அகெளண்ட்ல சரியான கணக்கு வரும்வரை பணம் கட்ட மாட்டேன்னுட்டு சொல்லிட்டார்.. அதுக்குப்பறம்.. 78000 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக குறைந்து வந்திருக்கு.. அதுக்கு மேல கணக்கை சரிசெய்ய முடியலையாம்.. நீங்க உங்க அமெளண்டை மட்டும் கட்டுங்க சார்.. பின்னாடி உங்க கணக்கை சரிசெய்திடறோம்.. அப்படின்னு சொல்ல.. நீங்க சரிசெய்ற வரைக்கும் லோன் அமெளண்டைக் கட்ட முடியாதுன்னு கறாராக சொல்லிட்டார் நண்பர்.. இப்போ ஒரு ஆண்டுக்கு மேலயே ஆயிடுச்சு.. அவங்க அவரோட கணக்கை சரிசெய்யவும் இல்ல.. இவர் லோன் அமெளண்டைக் கட்டவும் இல்ல.. கிரெடிட் கார்டு யூஸ் பண்றதையே நண்பர் விட்டுட்டார்..

நம்ம நண்பர் நல்ல விவரமான ஆளாக இருந்ததால இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிச்சிட்டார்.. இதுவே விவரம் தெரியாத ஆளாக இருந்திருந்தால் முதுகுல டின் கட்டியிருப்பானுங்க அந்த பேங்க்காரனுங்க..

ஏற்கனவே கிரெடிட் கார்டு வைத்திருக்கற நண்பர்களுக்கு.. உங்க கார்டை அப்கிரேட் பண்றேன்னு கஸ்டமர்கேர்ல இருந்து கேட்டால்.. ஏதாவது பிரிவியஸ் பேலன்ஸ் பெண்டிங் இருக்கான்னு பார்த்துக்கங்க.. அப்புறம் புதுக்கார்டைப் பற்றி அனைத்து சந்தேகங்களையும் தெளிவாகக் கேட்டுத் தெரிஞ்சுக்கங்க..

முழிச்சுக்கங்க.. பிழைச்சுக்கங்க..

டிஸ்கி 1: கிரெடிட் கார்டை வைச்சு நடத்தப்படற மற்றொரு மோசடியைப் பற்றியும்.. இந்தப் பதிவிலே எழுதலாம்னு இருக்கேன்.. இதுவே ரொம்ப லென்தியாக ஆயிட்டதால மற்றொரு முறை எழுதறேன்..

டிஸ்கி 2: காஸ்ட்லி மொபைல்ஸ் வாங்கற என்னமா உங்களுக்கு?.. அதில் நடக்கும் ஒரு மோசடி பற்றி அடுத்த பதிவில் எழுதறேன்.. போயிட்டு வர்றேன்.. :-)

படங்கள்: நன்றி கூகுள்


Wednesday, December 15, 2010

உலகைக் காக்கும் முயற்சியில் புரூஸ் வில்ஸ்

12 Monkeys - 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்..

1997 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஒருவிதமான வைரஸ் தாக்கி மனித இனமே அழிஞ்சுடுது..

படம் வருங்காலத்துல ஏதோ ஒரு ஆண்டுல இருந்து தொடங்குது.. வைரஸ் தாக்குதல்ல தப்பிச்சு.. உயிரோட இருக்கற மனிதர்கள்.. பூமிக்கு அடியில தங்களோட இருப்பிடங்களை அமைச்சிக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்காங்க.. பூமியைத் திரும்பவும் விலங்குகள் ஆட்சி செய்ய ஆரம்பிச்சிடுச்சு.. பூமியைத் தாக்கியிருக்கற வைரஸ் என்ன வகையின்னு தெரிஞ்சுக்க முடியாமல்.. அதுக்கு எந்தக் கியூரும் இதுவரைக் கண்டுபிடிக்க முடியல..

பூமிக்கு அடியில வாழ்க்கையை நடத்திக்கிட்டு இருக்கற மனிதர்களோட இருக்கற அறிவியலாளர்கள்.. அந்த வைரஸை அழிக்கறதுக்கான முயற்சியில ஈடுபட்டுட்டு இருக்காங்க.. 1997 ஆம் ஆண்டு இந்த வைரஸைப் பரப்பினது.. 12 மங்கிஸ்னு ஒரு தீவிரவாதக்குழு அப்படிங்கற விசயம் மட்டும் அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு..

புரூஸ் வில்ஸை.. டைம் மெசின் மூலமாக 1996 ஆம் ஆண்டோட இறுதிக்கு அனுப்பி.. அந்த 12 மங்கிஸ் குருப்பைப் பற்றியும்.. வைரஸைப் பற்றியும் தகவல் தெரிஞ்சுட்டு வரச்சொல்லி அனுப்பறாங்க.. ஆனால் 1996 ஆம் ஆண்டுக்கு அனுப்பப்படறதுக்கு பதிலாக.. 1990 ஆம் ஆண்டுக்கு அனுப்பப்பட்டுடறார்.. அங்கே போய் அவரும் பேந்தப் பேந்த முழிச்சுக்கிட்டு நான் புயூட்சர்ல இருந்து வந்திருக்கேன்.. நீங்கள் எல்லாரும் செத்துப் போயிட்டீங்க.. நீங்க எல்லாரும் இறந்தகாலத்துல இருக்கீங்க.. அப்படின்னெல்லாம் உளற.. அவரைத் தூக்கி மெண்டல் ஹாஸ்பிட்டல்ல போட்டுடறாங்க..

புரூஸ்வில்ஸுக்கு சின்ன வயசுல இருந்தே ஒரு கனவு வந்துட்டே இருக்கு.. கனவு என்னன்னா.. அவரோட எட்டு வயசுல ஒரு ஏர்போட்டுல இருக்கறப்போ.. ஒருத்தரைப் போலீஸ் சுடறாங்க.. சுடப்பட்டவரைப் பார்த்து "நோ"ன்னு கத்திக்கிட்டே ஒரு பொண்ணு ஓடிப்போயி அவரைத்தன் மடியில வைச்சிக்கிட்டு அழுகுது.. தினமும் இந்தக் கனவையே காண்கிறார்..

மெண்டல் ஹாஸ்பிட்டல்ல பிராட் பிட்டை சந்திக்கறார்.. அவருக்கு கொஞ்சம் மூளை கலங்கியிருக்கு.. அவருக்கு ட்ரிட் பண்ண வர்ற லேடி டாக்டரைப் பார்க்கற புரூஸ் வில்ஸ் உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கேன்னு சொல்ல.. எனக்கும் உன் முகம் ரொம்ப பெமிலியராக இருக்குன்னு சொல்றாங்க.. சோ அவங்கதான் கதாநாயகி..

தவறாக 1990 ஆம் ஆண்டுக்குப் போன புரூஸ் வில்ஸை மீண்டும் அழைச்சுக்கறாங்க சயண்டிஸ்ட்ஸ்.. திரும்பவும் கரெக்டான வருசத்துக்கு அனுப்பறோம்.. சரியாக வேலையை முடிச்சுட்டு வான்னு அவரை வார்ன் பண்ணி அனுப்பறாங்க.. ஆனால் இப்போ அவர் போனதோ.. முதல் உலகப்போர் நடந்துட்டு இருக்கற ஒரு வார் ஃபீல்டு.. அங்கே அவருக்கு ஒரு குண்டடி பட்டுடுது.. இந்த தவறை சரிசெய்து.. அவரைக் கரெக்டாக.. 1996 ஆம் ஆண்டு இறுதிக்கு அனுப்பறாங்க சயண்ட்டிஸ்ட்ஸ்..


குண்டடிபட்டு இருக்கற புரூஸ் வில்ஸ்.. 1996 ஆம் ஆண்டுல.. ஒருகாரை வழிமறிச்சு ஏறிக்கறார்.. அந்தக் கார்ல அவருக்கு முன்பு சிகிச்சை அளித்த லேடி டாக்டர்தான் இருக்காங்க.. அவரை மிரட்டி.. தன்னோட குறிப்புகள்ல 12 மங்கிஸ் குரூப் இருந்ததா சொல்லப்படற.. பிலடெல்பியா நகரத்துக்குப் போக சொல்றார் புரூஸ் வில்ஸ்.. அவரும் அழுதுக்கிட்டே கூட்டிட்டுப் போறார்..

12 மங்கிஸ் குரூப்போட தலைவன் யாருன்னா.. முன்பு மெண்டல் ஹாஸ்பிடல்ல புருஸ் வில்ஸ் சந்திச்ச பிராட் பிட்தான்.. பிராட் பிட் இன்னும் மறை கழண்ட மாதிரியேதான் இருக்கார்..


நான் வருங்காலத்துல இருந்து 12 மங்கிஸ் அப்படிங்கற குரூப்பைக் கண்டுபிடிக்க வந்துருக்கேன்னு நீ உளறிட்டு இருந்ததை வைச்சுத்தான் நான் இந்த குரூப்பையே ஃபாம் பண்ணினேன்.. நீ சொன்னமாதிரி மனித இனத்தை அழிப்பேன்.. இந்த ஐடியாவே நீதான் எனக்குக் கொடுத்த.. அப்படின்னு பிராட்பிட்.. புரூஸ் வில்ஸ் மேலயே பழியைத் தூக்கிப் போடறார்.. இப்படி அவர் சொல்ல.. புரூஸ்வில்ஸுக்கு பயங்கரமான அதிர்ச்சி.. ஆனால் பிராட் பிட்டுக்கு வைரஸைப் பற்றியெல்லாம் எந்த நாலேட்ஜும் இல்ல..

சோ.. 12 மங்கிஸ் அப்படிங்கறது ஒரு சப்பையான குரூப்.. சும்மா காலித்தனம் பண்றதுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்குன்னும்.. வேற யாரோதான் வைரஸ் தாக்குதலுக்கு காரணம்னும் புரிஞ்சுக்கறார் புரூஸ் வில்ஸ்..

புரூஸ் வில்ஸ் சொல்லும் விசயங்களோட இப்போ நடக்கற நிகழ்வுகள் எல்லாம் ஒத்துப்போறதால.. அவர் சொல்றது எல்லாம் உண்மைதான்னு நம்ப ஆரம்பிக்கறார் அந்த லேடி டாக்டர்.. நடக்கப்போறதை எப்படியும் தடுக்க முடியாது.. அதனால இருக்கற வரைக்கும் என்ஜாய் பண்ணலாம்னு ரெண்டு பேரும் கிளம்பறாங்க அந்த ஊரை விட்டு..

கிளைமாக்ஸ்.. புரூஸ் வில்ஸும், லேடி டாக்டரும்.. ஏர்போர்ட் போக.. அங்கே இருக்கற ஒரு ஆள்தான் வைரஸைக் கையில வைச்சிருக்கான்னு புரூஸ்வில்ஸுக்கு பியூட்சர்ல இருந்து இன்ஃபர்மேசன் வருது.. அந்த ஆளைக் அவர் கொல்லப்போக.. போலீஸ் புரூஸ் வில்ஸை சுட.. லேடிடாக்டர்.. அவரைத் தன்னோட மடியில கிடத்தி அழறாங்க.. அதை ஒரு சின்னப் பையன் கலக்கமாகப் பார்த்துட்டு இருக்கான்.. அது யாருன்னா... அதுதான் சின்னப் பையனாக இருக்கற புரூஸ் வில்ஸ்..

வைரஸோட அந்த ஆள் எஸ்கேப்.. முடிவை நாமலே கணிச்சுக்க வேண்டியதுதான்..

மிகவும் அருமையான கதைக்களம்.. ஹாலிவுட்காரங்களுக்கு உலகத்தை அழிச்சு அழிச்சு விளையாடறதுதான் ரொம்பப் பிடிச்சுருக்கு போல.. அதுவும் உலகம் அழியெறதெல்லாம் அமெரிக்காவுல இருந்தேதான் ஆரம்பிக்கும்.. அதேபோலதான் இந்தப் படமும்.. 2012 திரைப்படம் மாதிரி பிரமாண்டமாக எடுத்திருக்க வேண்டிய திரைப்படம்.. ஆனால் ரொம்ப லோ பட்ஜெட்ல எடுத்துட்டாங்க போல.. எல்லாமே சீனையுமே சின்ன செட்டைப் போட்டே முடிச்சுட்டாங்க..

பூமியில மனிதர்கள் எல்லாம் அழிஞ்சிடறாங்க.. விலங்குகள் ஆட்சி செய்ற பூமியில போய்.. சில பூச்சிகளோட சேம்பில்ஸை எடுத்துட்டு வரச்சொல்லி புரூஸ் வில்ஸை மேலே அனுப்பறாங்க.. பூமிக்கு மேல அவர் வர்றதை எவ்வளவோ திரில்லாகக் காட்டியிருக்க முடியும்.. ஆனால் பூமியில விலங்குகள் நிறைய நடமாடுதுன்னு காமிக்கறதுக்காக.. ஒரே ஒரு சிங்கத்தையும்.. கரடியையும் மட்டும் அவர் பார்க்கறதாகக் காமிச்சிட்டாங்க..

வைரஸுக்குப் பயந்து அண்டர்கிரெளண்ட்ல மனிதர்கள் வாழ்ந்துட்டு இருக்காங்க அப்படிங்கறதுதான் கான்செப்ட்.. ஆனால் அந்த விசயத்தைக் காமித்ததும் சரியில்ல... ஏதோ கூண்டு கூண்டாக காமிச்சு முடிச்சுட்டாங்க.. மற்றொரு காமெடி.. சயண்டிஸ்ட்ஸ்.. அவங்களை என்னடான்னா.. மந்திரவாதிகள் மாதிரி காமிச்சு பில்டப் குடுத்துட்டாங்க..

புரூஸ் வில்ஸ் ஒவ்வொரு முறையும் காலம் மாறிப் போயிடறதையும் நல்ல வெயிட்டாகக் காமிச்சிருந்திருக்கலாம்.. முதலாம் உலகப்போர் நடந்திட்டு இருக்குங்கறதைக் காமிக்க.. நாலுபேர் அவரைச் சுத்திக் கத்திக்கிட்டே சுடறமாதிரி ஒரு சீன் அவ்லோதான்..

இப்படி எடுத்திருக்கலாம்.. அப்படி எடுத்திருக்கலாம்னு குறை சொல்லிட்டு இருந்தாலும்.. அடுத்து என்ன நடக்கும்னு விறுவிறுப்பாகவே படத்தைக் கொண்டு போயிருக்காங்க.. சில இடங்கள் மட்டும் எதார்த்தம் இல்லாம..

சோ.. நம்ம ஹீரோ உலகத்தைக் காப்பாற்றாமயே இறந்திடறார்.. நல்ல மூவி..

படங்கள்: நன்றி கூகுள்

Monday, December 13, 2010

தூங்காத இரவுகள்


பெங்களூர்ல இருந்து நம்ம ஊருக்குப் போறதுக்கு கரெக்டா 10 மணி நேரத்துல இருந்து 11 மணி நேரமாயிடுங்க.. பெங்களூர் டூ சேலம்.. அப்புறம் அங்கேயிருந்து பழனிக்கு வண்டிகள் ஒரு மணி நேரத்துக்கு ஒன்னுன்னு இருக்கும்.. நான் எப்பவும் இந்த மாதிரி மாறி மாறி போறதை விரும்பறதில்லை.. ஏன்னா பஸ்ல ஏறி உட்கார்ந்து கண்டக்டர் டிக்கெட் கொடுக்கற வரைக்கும்தான் முழுச்சிருப்பேன்.. அப்புறம் அடுத்து வண்டி எங்கெங்க நிக்குதுதோ அங்கே மட்டும்தான் முழிப்பு வரும்.. அதனால எப்பவும் பிரைவேட் பஸ்களைத்தான் விரும்பறது.. பஸ் ஏறி தூங்கினமா.. ஊர்ல வந்து கண்ணு முழிச்சமா.. இப்படி இருக்கறதுதான் பிடிக்கும்.. நிறையப் பேரைப் பார்த்து இருக்கேன்.. நைட் முழுக்க கொட்டக் கொட்ட கண் முழிச்சிட்டே வருவாங்க... நமக்கு அதெல்லாம் சரிபட்டு வராது...

சாதாரண பேருந்துகளை நான் விரும்பாதததுக்கு இன்னொரு காரணம்.. அம்மாதிரியான பேருந்துகள்ல 3 மூன்று பேர் உட்கார்ற மாதிரி ஒரு வரிசையிலயும்.. ரெண்டு பேர் உட்கார்ற மாதிரி ஒரு வரிசையிலும் சீட்கள் அமைச்சிருப்பாங்க.. எந்தப் பக்கம் உட்கார்ந்தாலும் சரி.. கூட உட்கார்றவங்க கொஞ்சம் குண்டா இருந்துட்டாங்கன்னா.. ரொம்ப அசெளரியமாகப் போயிடும்.. காரணம் நம்ம அரசாங்கப் பேருந்துகள்ல சீட் அவ்வளவு அசெளரியமாக இருக்கும்.. இதுல பக்கத்துல உட்கார்ந்து வர்றவங்க தூங்கி நம்ம மேல விழ ஆரம்பிச்சிட்டாங்கன்னா.. அப்புறம் நாம் இறங்கற வரைக்குமோ இல்ல அவங்க இறங்கற வரைக்குமோ அவங்க தலைப் பிடிச்சு தூக்கி விட்டுட்டேதான் இருக்கனும்.. அவங்களோட பாரத்தையும் சுமந்துட்டே.. ஒரே எரிச்சலாய் போயிடும்..

இதுல சிலர் பஸ் ஏர்றதுனாலே தண்ணியடிச்சுட்டுதான் ஏறுவாங்க.. பயங்கரமாக நாறித்தொலைக்கும்.. தலைவலி வந்துடும்.. இதனால ஊருக்குப் போறதுனாலே எப்பவுமே பிளான் பண்ணி.. டிக்கெட் புக் பண்ணிப் போயிடுவேன்.. சில நேரங்கள்ல திடீர்னு ஊருக்கு கிளம்ப வேண்டியிருக்கும்.. இல்லன்னா.. பிரைவேட் பஸ்கள்ல டிக்கெட் கிடைக்காமப் போயிடும்.. அந்த சமயங்கள்ல மேல் சொன்னமாதிரி ஏதாவது பிரச்சினைகளைத் தாங்கிக்கிட்டுத்தான் போக வேண்டியிருக்கும்..

இந்தமாதிரி எதிர்பாராத பயணங்கள்ல பெரும்பாலும் SETC கிடைக்குதான்னு பார்ப்பேன்.. ஏன்னா.. SETC பஸ் புல்லாயிடுச்சுன்னா.. இடையில இருக்கற எந்த ஊர்களுக்குள்ளயும் நுழையாம நேரா பைபாஸ் ரோட்ல போயிட்டே இருப்பாங்க..

ஒருமுறை ஊருக்குப் போறதுக்கு பஸ்ஸுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தப்போ.. ஒரு SETC வந்தது.. உள்ளே சீட் எல்லாம் இல்லப்பா.. டிரைவர் சீட் பின்னாடி உட்கார்ந்துகறதுனா ஏறிக்கோ அப்படின்னார் கண்டக்டர்.. சரி.. நார்மல் பஸ்ல போனாலும் ரொம்பக் கஷ்டம்தான்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போயிடலாம்னு ஏறிட்டேன்.. ஒசூர் தாண்டி கொஞ்சம் நேரம் இருக்கும்.. எப்பவும் போல தூங்க ஆரம்பிச்சிருந்தேன்.. திடீர்னு எண்ணன்னே தூங்கீட்டிங்க அப்படின்னு ஒரு வாய்ஸ்.. லைட்டா முழிச்சுப் பார்த்தா.. டிரைவர் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லிக்கிட்டு இருக்கார்.. எப்படி இருந்திருக்கும்.. தூக்கமெல்லாம் காணாமப் போச்சு.. டிரைவருக்கு எப்படியும் 55 வயசுக்கு மேல இருக்கும்.. ரொம்ப டயர்டா இருந்தாராம்.. அதான் கண்ணு சொக்கிடுச்சாம்.. எப்படிப் பாருங்க.. கொஞ்சம் நேரம் பேசிட்டு இருந்த கண்டக்டரும் தூங்கிட்டார்.. அதுக்கப்புறம் ஊர் வந்து சேர்ற வரைக்கும் நான்தான் அவரோட ஏதாவது பேசிக்கிட்டே வந்துட்டு இருந்தேன்..

டிரைவர் வேலைங்கறது கண்டிப்பாக ரொம்பக் கடுமையான வேலைதான்.. சும்மா எப்பவாவது லாங் டிரைவ் போனாலே நமக்கு வீடு திரும்பறதுக்குள்ள சலிப்பாயிடும்.. பாவம்தான் இவங்க.. ஆனால் இவ்வளவு வயசானவராக இருந்துட்டு 500 கிலோமீட்டருக்கு தொடர்ந்து ஓட்டற மாதிரி லாங் ட்ரிப்பை எல்லாம் எதுக்கு ஏத்துக்கனும்.. கண்டிப்பாக குறைந்த தூரங்கள்ல ஓட்டறதுக்கும் அவங்களால பர்மிசன் வாங்க முடியும்னுதான் நினைக்கிறேன்.. இல்ல அப்படியெல்லாம் இல்லையான்னும் தெரியல..

மற்றொரு முறை.. நானும் ரமேஷும்.. சேலம் பஸ்ல உட்கார்ந்திருந்தோம்.. திடீர்னு ரொம்ப சத்தம் கேட்டு முழிச்சேன்.. ரமேஷ்கிட்ட என்னாச்சுங்க. ஏன் பஸ்ல எல்லாரும் சண்டை போட்டுட்டு இருக்காங்கன்னு கேட்டேன்.. அதுக்கு அவர்.. அது ஒன்னும் இல்லடா.. டிரைவர் தண்ணி போட்டுட்டு தாறுமாறாக ஓட்டிக்கிட்டு இருக்கார்.. கண்டக்டர் சொன்னாலும்.. பயணிகள் சொன்னாலும் கண்ட்ரோல்டாக ஓட்ட மாட்டேங்கறார்.. அதான் சத்தம் அப்படின்னு கூலா சொல்றார்.. நான் அப்போ இருந்து பேந்தப் பேந்த முழிச்சுக்கிட்டு ரோட்டையே பார்த்துட்டு உட்கார்ந்துருந்தேன்.. அவர் கரெக்டாக ஓட்டறாரா இல்லை.. தாறுமாறாக ஓட்டறாரான்னே தெரியல..

எனக்கு முன் சீட்ல உட்கார்ந்திருந்த ஒருத்தர்.. மிலிட்டரி ரிட்டனாம்.. இப்போதான் சர்வீஸ் முடிஞ்சு ஊருக்குப் போறேன்.. என்னைய ஊர் கொண்டு சேத்தமாட்டான் போல இவன்னு சொல்லி... நான் போலீஸுக்கு போன் பண்றேன்னுட்டு அவசர போலீஸுக்கு போன் பண்ணிட்டார்.. அவங்களும் பஸ் எந்த இடத்துல வந்திட்டு இருக்குன்னு கேட்டுக்கிட்டு.. கிருஷ்ணகிரி எண்டர் ஆகிறப்போ பஸ்ஸை மடக்கறோம்னு சொன்னாங்க போல.. பஸ்ஸும் கிரிஷ்ணகிரிகிட்ட வந்துடுச்சு.. திடீர்னு டம்முனு ஒரு சத்தம்.. போச்சுடா இன்னைக்கு காலின்னு நினைச்சு கண்ணை இருக்க மூடினா.. ஒன்னும் ஆகலை.. ஆனால் டிரைவர் ஒரு பைக்காரரை இடிச்சுத் தள்ளிட்டார்.. நல்லவேளை பக்கம் ஒரு வைக்கப்போரு இருந்ததால பைக் அதுமேல போய்தான் சொருகிச்சு.. ஓட்டினவருக்கும் ஒன்னும் இல்ல.. இது ஆகாதுன்னு இறங்கியும் போகமுடியல.. நடுவழியில நிக்கறோம்.. சரின்னுட்டு பயணத்தை தொடர்ந்தோம்.. சொன்னமாதிரி போலீஸ் பஸ்ஸை மடக்கி டிரைவரைத் திட்டினாங்க.. உள்ளே இருக்கற உயிர்கள் எல்லாம் உங்க கையிலதான இருக்கு.. ஏன் தண்ணி போட்டிங்கன்னு கேட்டதுக்கு.. ரொம்ப ஒடம்பு வலிசார் அதான்.. அப்படின்னார் டிரைவர்.. அவருக்கு போலீஸே டீ வாங்கிக் கொடுத்து.. சேலம் போய் சேர்ந்துட்டு போன் பண்ணுங்கன்னு சொல்லி அனுப்பி வைச்சிட்டாங்க.. நாங்க ரெண்டு பேரும்.. பஸ்ல இருந்த நிறையப் பேரும் கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டுலயே எஸ்கேப்.. நீ எப்படியோ போய் போன் பண்ணிக்க சாமின்னு திட்டிட்டு இறங்கிட்டோம்..

உடம்பு வலியாக இருந்தால்.. லீவு எடுத்துட்டுப் போக வேண்டியதுதானே.. ரொம்ப அசால்டாக உடம்பு வலின்னு சொல்லுது அந்த பக்கி.. இங்கே நமக்குத்தான் பஸ் ஏறி இறங்கறதுக்குள்ள கருக் கருக்குன்னே உட்கார்ந்துக்க வேண்டியிருக்கு..

இந்த இரண்டு இரவுகளுமே.. மறக்க முடியாத பயணங்கள்.. திக் திக்னு தாங்க.. தூங்காமயே போச்சு..


Saturday, December 11, 2010

"தினமலரும் ஒரு பதிவரும்" திருடிய என் பதிவு..!

நேற்று இரவு.. கிரெடிட் கார்டும்.. கஸ்டமர் கேரும்.. என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதி வெளியிட்டிருந்தேன்..

இன்று அப்பதிவுக்கு மறுமொழியிட்டிருந்த "ராஜா" என்ற நண்பர்.. என்னோட பதிவு தினமலர் பத்திரிக்கையில வெளியாகி இருப்பதாக பின்னூட்டம் இட்டிருந்தார்.. அவர் கொடுத்திருந்த லிங்கிற்கு போய் பார்த்த எனக்கு பயங்கர அதிர்ச்சி.. அப்படியே என்னுடைய பதிவு ஒரு வரிகூட மாறாமல்.. நான் வெளியிட்டிருந்த போட்டோஸ் உட்பட அப்படியே பதிவாகியிருந்தது.. என்னுடைய பெயர் அதில் இல்லை..

என்னுடைய பதிவும் பெரும்பாலான மக்கள் படிக்கும் பத்திரிக்கையில் வெளியாகி இருப்பது எனக்கு சந்தோசமாத்தான் இருக்கு.. ஆனால் இதைப் பார்த்து சந்தோசம் மட்டும் பட்டுட்டு விட்டுட்டன்னா.. பிறகு ஒருநாள் என்னுடைய பதிவைப் படிக்கும் யாராவது நான் அந்தப் பத்திரிக்கையில் இருந்து முழு பதிவையும் திருடியதாகத் தானே நினைப்பாங்க.. சமுதாயத்தில் மிகப்பெரிய பெயரில் இருந்து கொண்டு.. இப்படி என்னுடைய அனுமதி இல்லாமல் தினமலர் பத்திரிக்கை என்னுடைய பதிவை எப்படி வெளியிடலாம்..

இன்று மாலை (11 டிசம்பர் 2010) மாலை 4.57க்கு என்னுடைய பதிவை அவர்கள் வெளியிட்டிருக்காங்க..

என்னுடைய பதிவு வெளியான அவர்களது லிங்கையும்.. அவங்களோட வலைப்பக்கத்தை நான் எடுத்த ஸ்க்ரீன் சாட்டையும் கீழே கொடுத்திருக்கேன்.. நீங்களே பாருங்க..

http://www.dinamalar.com/business/



இப்பதிவின் பின்னூட்டத்தில் இன்னொரு பிளாக்லயும் என்னுடைய பதிவை திருடியிருப்பதாக நா.மணிவண்ணன் லிங்க் கொடுத்திருக்கார்.. அங்கே போய் பார்த்தா அதுலயும் அப்படியே ஃபோட்டோ உட்பட காப்பி பண்ணிப் பேஸ்ட் பண்ணியிருக்காங்க.. என்னங்க இது!!..

இதையும் அப்படியே பார்த்திடுங்க.. என்ன கொடுமை இது!!
சொந்தமா எழுதத் தெரியலைன்னா என்னத்துக்கு பதிவு ஆரம்பிச்சு.. காப்பி பேஸ்டுல என்னத்த கண்டுடறாங்கன்னு தெரியல

-------------------------------------------------------------------
குறிப்பு: தினமலருக்கு நான் அனுப்பிய மெயில் இது..
மதிப்புக்குரிய தினமலருக்கு

நான் ஒரு வலைப்பதிவர்.. நேற்று கிரெடிட் கார்டும்... கஸ்டமர் கேரும்... என்ற தலைப்பில் எனது வலைப்பதிவில் ஒரு பதிவிட்டிருந்தேன். இன்று உங்கள் தினமலர் வர்த்தகப் பகுதியைப் பார்த்த எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் நேற்று எழுதிய பதிவு.. அப்படியே வார்த்தை மாறாமல்.. ஏன் நான் வெளியிட்டிருந்த இரண்டு புகைப்படம் கூட மாறாமல்... உங்களது தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது... என்னுடைய பெயரோ எனது வலைத்தள முகவரியோ அதில் இடம்பெறவில்லை... எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு சரியான விளக்கத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்...

எனது பதிவு வெளியான முகவரியை கீழே அளித்துள்ளேன்..


http://abdulkadher.blogspot.com/2010/12/blog-post_10.html


நன்றி

அப்துல்காதர்
(எனது தளம்: பதிவுலகில் பாபு)

----------------------------------------------------------------------------------------

Friday, December 10, 2010

கிரெடிட் கார்டும்.. கஸ்டமர் கேரும்..

கிரெடிட் கார்டு புழக்கம் அதிகமாக இருக்கற காலம் இது.. பெரும்பாலும் ஐ.டி துறையினர்தான் கிரெடிட் கார்டுக்கு அடிமையாய் இருக்காங்க.. ஒருமுறை கிரெடிட்கார்டை யூஸ் பண்ணிப் பழக்கப்படுத்திட்டோம்னா.. எந்தக் கடைக்குப் போனோம்னாலும் சரி.. நமக்கு எவ்வளவு சம்பளம்.. எவ்வளவுக்கு சாப்பிட வைச்சிருக்கோம் எதுவும் நினைப்பு இருக்காது.. எடுத்து சரக்.. முடிஞ்சது.. அடுத்து பில் வந்ததுக்குப் அப்புறம்தான் மண்டையில ஏறும்.. இதுக்கெல்லாம் பணம் கட்டனுமான்னு..

பொருட்கள் வாங்கினது என்னமோ நாமதான்.. வாங்கின பொருளை யூஸ் பண்ண மட்டும் நல்லா இருக்கும்... பணம் கட்டதாங்க அவ்ளோ கஷ்டமாயிருக்கு.. :-)

பில் வந்துடுச்சா.. நமக்கு என்னதான் வேற பிரச்சினை இருந்தாலும் சரி.. வேற தலை போற கமிட்மெண்ட் இருந்தாலும் சரி.. கார்டுக்குப் பில் கட்டிட்டா தப்பிச்சோம்.. இல்ல அடுத்த பில்லிங்ல கிரெடிட் லிமிட்டை விட ரெண்டு மடங்கு பில் வரும்..

நம்முடைய பில் 500.26 ரூபாய் அப்படின்னு வந்திருக்குனு வைச்சிக்குவோம்.. சரி ஒரு ரெளண்டா இருக்கட்டுமே அப்படின்னு 500 ரூபாய் மட்டும் கட்டினாலும் அடுத்த பில்லுல நமக்கு அதிர்ச்சி இருக்கு.. கட்டாம விட்ட .26 பைசாக்கு வட்டி போடறது மட்டுமில்லாம புதிய பில்லிங்ல இருக்கற அனைத்து பொருட்களுக்கும் சேர்த்துதான் வட்டி போட்டு அனுப்பியிருப்பாங்க..

டேய் என்னடா பண்ணியிருக்கீங்க.. நான் போனமாசம் கரெக்டா பில் கட்டியிருக்கண்டா.. எதுக்கு வட்டி அப்படின்னு கேட்டா.. கன்சர்ன் டிபார்ட்மென்ட்டுக்கு உங்க காலை டிரான்ஸ்ஃபர் பண்றேன் சார் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டு.. மியூசிக்கைப் போட்டு விட்டுட்டுப் போயிடுவாங்க கஸ்டமர்கேர்ல.. கொஞ்ச நேரத்துல யாராவது ஒருத்தன் காலை எடுத்து திரும்பவும் கதை கேட்டுட்டு.. சார் நீங்க .26 பைசாவைக் கட்டாம விட்டு இருக்கீங்க.. இது சிஸ்டமேட்டிக் இல்லையா.. அதனால ஏற்கனவே உங்க பில்லிங்ல .1 பைசா பெண்டிங் இருந்தாலும் அதுக்கும் இந்த மாச பில்லிங்கும் சேர்ந்துதான் வட்டி போடுவோம் சார்.. நீங்க எங்களோட டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸை திரும்பவும் படிச்சுப் பாருங்க தெரியும்னு சொல்லுவான்.. அப்ப வரும் பாருங்க கோவம்.. என்னாங்கடா நினைச்சுட்டு இருக்கீங்க.. .26 பைசா கட்டாம மிஸ் பண்ணினதுக்கு இவ்வளவு வட்டி போடுவீங்களான்னு ரொம்பக் கத்தினோம்னா.. சரிங்க சார்.. கம்ப்ளைண்ட் நம்பர் நோட் பண்ணிக்கங்க.. வித்தின் 48 அவர்ஸ்ல உங்க பிரச்சினையை சால்வ் பண்றோம்னு சொல்லிட்டு வைச்சிடுவான்..

இதெல்லாம் தேவையா.. தேவையா.. ஒழுக்கமா அந்த .26 பைசாவையும் சேர்த்து கட்டியிருந்தா இவ்வளவு கத்த வேண்டியிருந்திருக்குமா.. அப்படின்னு நொந்துக்கிட்டு.. புது பில்லை அவங்க பிராசஸ் பண்ற வரைக்கும் அவங்களைத் திரும்பத் திரும்ப ஃபாலோ பண்ண வேண்டியிருக்கும்..

திரும்பவும் பில்லை ப்ராசஸ் பண்றதுக்கு.. இன்னும் நாலு முறை தொங்கி.. நானு.. அப்படின்னு ஆரம்பிச்சு.. திரும்பவும் பில்லை பிராசஸ் பண்றேன்னு சொல்லியிருக்காங்க.. என்னப்பா சொல்றீங்கன்னு அழுதவுடனே.. அப்புறம் பில்மாறி வரும்..

மக்களே இது என்னுடைய எக்ஸ்பீரியன்ஸ் இல்ல.. நான் கிரெடிட் கார்டு வாங்கின அன்னைக்கு என்னோட பிரண்ட் ஒருத்தன் இப்படி ஒரு அனுபவத்தை சொன்னான்.. அதுல இருந்து பில் வந்ததுன்னா 5 ரூபாய் அதிகமாவே கட்டிடறது.. எதுக்கு வம்புன்னு..

இருந்தாலும் கிரெடிட் கார்டு வாங்கின புதுசுல அதை ஆன்லைன்ல அக்சஸ் பண்றதுக்கு பின் நம்பர் வேனும் இல்லையா.. அதை கார்டு அனுப்பி பின்னாடியே ஒரு 15 நாள்ல அனுப்புவானுங்க.. அது எனக்குத் தெரியாதே.. சரி கஸ்டமர் கேருக்குப் போன் பண்ணிக் கேப்பமே அப்படின்னு போன் பண்ணினேன்.. விசயத்தைக் கேட்டுட்டு.. சார் நாங்க வைச்சிருக்கற மெடிக்கிளைம் கார்டை சப்ஸ்கிரைப் பண்ணினாத்தான் புதுக் கஸ்டமருக்கு பின் நம்பர் அனுப்புவோம்.. உங்களுக்கு மெடிக்கிளைம் ஆக்டிவேட் பண்ணி விடட்டுங்களான்னு கேட்டுச்சு அந்தப் பொண்ணு..

அப்படியா... சரி இருங்க நான் திரும்ப போன் பண்றேன்னு.. எனக்கு அட்வைஸ் பண்ணின பிரண்டுக்குப் போன் பண்ணிக் கேட்டேன்... டேய் நல்லா மிளகாய் அரைச்சிருப்பாங்க உன் தலையில.. உனக்கு பின் நம்பர் வீடு தேடி வரும் வெயிட் பண்ணுன்னு சொல்லிட்டு வைச்சிட்டான்.. எனக்கு அடப்பாவிகளான்னு ஆயிடுச்சு.. சரி இனி இந்தப் பயிலுககிட்ட கொஞ்சம் கவனமாகவே இருக்கனும்னு மனசுக்குள்ள உறுதி மொழியெடுத்துக்கிட்டேன்..

ஒரு மாசம் முடிஞ்சது.. முதல் முறையா கிரெடிட் கார்டு வாங்கியிருந்தனா.. அதனால தினமும் கார்டை ஒருமுறை பெருமையாக எடுத்துப் பார்த்துட்டு பர்ஸ்குள்ள வைச்சுப்பேன்.. ஒரு நாள் திரும்பவும் ஒரு கால் வந்தது.. சார் மெடிக்கல் இன்சூரன்ஸ் ஒன்னு உங்க பேர்ல 4 லட்சத்துக்கு ஆக்டிவேட் ஆயிருக்கு சார்.. நீங்க ஓகேன்னு சொன்னா.. இந்தக் போன் காலவே கன்பர்மேசனா எடுத்துக்கிட்டு உங்களுக்கு கொரியர் பண்ணிடுவேன்.. நீங்க மாசம் அதுக்கு 4 ஆயிரம் ரூபாய் கட்டனும்.. அதையும் உங்க கார்டுல இருந்தே லவட்டிக்குவோம்னு சொல்லுச்சு அந்தப் பொண்ணு.. என்னம்மா சொல்ற.. நான் எந்த மெடிக்கல் இன்சூரன்ஸுக்கும் அப்ளை பண்ணவே இல்லையே அப்படின்னேன்.. இல்லங்க சார் நீங்க கார்டு அப்ளை பண்றதுக்கு ஃபாம் ஃபில் பண்ணிங்க இல்லையா.. அதுல இருந்த ஒரு செக் பாக்சை டிக் பண்ணிட்டீங்க.. அதனால உங்க பேர்ல அப்பவே ஆக்டிவேட் ஆயி இன்னும் டெலிவரி பண்ணாம இருக்கு அப்படின்னு சொல்லுச்சு அந்தப் பொண்ணு.. இல்ல வேணாம் கேன்சல் பண்ணிடுங்கன்னேன்.. ஃபார் டி ஆக்டிவேசன்.. யூ நீட் டூ பே 25000 ருபீஸ் சார் அப்படின்னு சொல்லுது..

எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு.. இது என்னடா வம்பாப் போச்சுன்னு நான் இதே நம்பருக்கு உங்களைக் கூப்பிடறேன்னு சொல்லிட்டு.. கஸ்டமர் கேருக்கு கால் பண்ணி விசயத்தை சொல்லி விவரம் கேட்டேன்.. அதுக்கு அங்கே இருந்த பொண்ணு.. சார் நீங்க சொல்ற மாதிரி எதுவும் கிடையாது.. பொய் சொல்லியிருக்காங்க.. ஆனால் உங்களுக்காக நான் ஒரு ஸ்பெசல் ஆஃபர் வைச்சிருக்கேன்.. உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருக்கா சார் அப்படின்னு கேட்டுச்சு.. எனக்கு வந்தது பாருங்க கோவம்.. வாய் வரைக்கும் வந்திடுச்சு.. அடக்கிக்கிட்டு "நாட் இன்ட்ரஸ்டடு" அப்படின்னு சொல்லி வைச்சிட்டு.. எனக்கு ஃபோன் பண்ணி அன்னைக்கு நைட் தூக்கத்தைக் கெடுத்த பொண்ணுக்கு கால் பண்ணித் திட்டினேன் பாருங்க.. இதுவரைக்கும் தெரியாத பொண்ணுங்களை எல்லாம் திட்டினதே இல்ல.. அப்படி ஒரு திட்டு..

ஆனால் திட்டிட்டு வைச்சுட்டு கோவம்லாம் அடங்கினதுக்கு அப்புறம் யோசிச்சுப் பார்த்தேன்.. பாவம் அந்தப் பொண்ணு.. என்ன பண்ணும்.. அதோட பிழைப்பு அது.. இப்படி எல்லாம் பொய் சொல்லித்தான் ஒவ்வொருத்தரையா பிடிக்க வேண்டியிருக்குன்னு நினைச்சிக்கிட்டேன்..

சோ.. கிரெடிட் கார்டு யூஸ் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டோம்னா.. இதெல்லாம் நாம பாஸிட்டிவா எடுத்துக்கிட்டு.. நாம கவனமா இருந்துக்கனும்.. கஸ்டமர் கேர்ல இருந்து கால் பண்ணி எது வேனும்னு கேட்டாலும் சரி.. கண்ணை மூடிக்கிட்டு "நோ" சொல்லிடுங்க.. ரைட்டா..

டிஸ்கி: இப்போ சொன்னது எல்லாம் கோல்டு கார்டுக்கு.. பிளாட்டினம் கார்டைப் பத்தி தெரிஞ்சிக்கனுமா.. அடுத்த பதிவுல பார்ப்போம்..

Thursday, December 9, 2010

THE OTHERS - திரை விமர்சனம்

இரண்டாம் உலகப்போர் காலக் கட்டத்துல இந்தப் படத்தோட கதை ஸ்டார்ட்டாகுது..

கிரேஸ் ஸ்டீவர்ட் (நிக்கோல் கிட்மேன்) இந்தப் படத்தோட கதாநாயகி.. கிரேஸுக்கு அன்னே அப்படின்னு ஒரு பொண்ணும், நிக்கோலஸ் அப்படின்னு ஒரு பையனும் இருக்காங்க.. இவங்க மூன்று பேரும் ஒரு ஒதுக்குப் புறமான பெரிய மாளிகையில வாழ்ந்துட்டு இருக்காங்க.. கிரேஸோட ஹஸ்பண்ட் சார்லஸ் இரண்டாம் உலகப்போருல கலந்துக்கப் போனவர் வீடு திரும்பவே இல்ல..

கிரேஸோட பசங்க இரண்டு பேருக்கும்.. சன்லைட் அலர்ஜி இருக்கு.. அவங்க ரெண்டு பேருக்கும் சூரிய வெளிச்சத்தை தாங்கற சக்தி கிடையாது.. அதனால அந்த பெரிய மாளிகையோட எல்லா அறைகளும் திரைச்சீலைகள் போட்டு மூடப்பட்டு எப்பவுமே இருட்டாவேதான் இருக்கும்..

அந்தப் பெரிய மாளிகையில வேலைக்காரங்களாக இரண்டு வயசான ஆளுங்களும்.. அவங்களோட சேர்ந்து ஒரு பொண்ணும் வர்றாங்க.. கிரேஸ் அவங்களோட வேலைகளை அசைன் பண்றார்..

கிரேஸ் தன்னோட குழந்தைகள்கிட்ட எப்பவுமே கொஞ்சம் கடுமையாகவே நடந்துக்கறாங்க.. அது அவரோட மகள் அன்னேவுக்குப் பிடிக்கல.. சில நிகழ்வுகளுக்குப் பிறகு.. அந்த மாளிகையில தங்களைத் தவிர வேறு யாரோ இருக்கற மாதிரி உணர்றாங்க கிரேஸ்.. ஒருமுறை அங்கே இருக்கற பியானோ ரூம்ல இசை கேக்குது.. உள்ளே போய் பார்த்தா யாருமே இல்ல.. குழம்பி நிக்கற கிரேஸோட முகத்துல அந்த அறையோட கதவு அறைந்து சாத்தப்படுது.. அதனால அவங்க ரொம்பக் குழம்பிப் போறாங்க.. வேலைக்காரங்ககிட்ட மாளிகையில வேற யாராவது இருக்காங்களான்னு தேட சொல்றாங்க..

அந்த வீட்ல விக்டர்னு ஒரு பையனையும்.. அந்தப் பையனோட அம்மா, அப்பா அப்புறம் ஒரு வயசான பாட்டி ஒன்னையும் அடிக்கடி பார்க்கறதா கிரேஸோட மகள் அன்னே சொல்றாங்க.. ஆனால் அதை கிரேஸ் நம்ப மறுக்கறாங்க.. பேய் மேல எல்லாம் தனக்கு நம்பிக்கை இல்லைன்னு சொல்லி அன்னேயை ரொம்பத் திட்டறாங்க..

அந்த மாளிகையில யாரோ ஒழிஞ்சு இருக்காங்கன்னு.. கிரேஸும், வேலைக்காரங்களும் ஒவ்வொரு அறையாத் தேட ஆரம்பிக்கறாங்க.. அந்தத் தேடுதல்ல அவங்களுக்கு ஒரு பழைய ஆல்பம் கிடைக்குது.. அந்த ஆல்பத்துல இருக்கற எல்லாரும் பெட்ல படுத்து தூங்கிட்டு இருக்கமாதிரி ஸ்டில்சா இருக்கு.. அதைப் பார்த்த வேலைக்காரம்மா.. இவங்க எல்லாரும் செத்துப் போனவங்க.. அப்படின்னு சொல்லி கிரேஸுக்கு கிலியை ஏற்படுத்தறாங்க..


இந்த மாதிரியெல்லாம் நடக்கறதால.. சிட்டிக்குப் போய் யாராவது பாதிரியாரைக் கூப்பிட்டு வந்து வீட்டுல என்ன இருக்குன்னு பார்க்க சொல்லலாம்னு காட்டு வழியா நடக்க ஆரம்பிக்கறாங்க கிரேஸ்.. அப்போ காட்டுப்பகுதியில தன்னோட கணவன் நடந்து வர்றதைப் பார்த்து.. அவரைக் கூட்டிட்டு மாளிகைக்குத் திரும்பறாங்க..

கிரேஸோட கணவர் சார்லஸ் அடுத்த நாளே அந்த மாளிகையை விட்டுப் போயிடறார்.. ஏன் போனார்னு ஒன்னும் புரியாம கிரேஸ் ரொம்ப தவிச்சுப் போயிடறாங்க..

ஒருநாள் காலையில கிரேஸுக்குத் தன்னோட பசங்க அலர்ற சத்தம் கேக்குது.. அவங்களோட அறைக்குப் போயி பார்த்தா.. அங்கே இருந்த திரைச்சிலைகள் அகற்றப்பட்டு இருக்கு.. அந்த அறையில மட்டுமில்லாம அந்த மாளிகை முழுவதும் திரைச்சீலைகள் அகற்றப்பட்டு இருக்கு.. தன்னோட பசங்களை ஒரு கட்டிலுக்கு அடியில ஒழிச்சு வைச்சுட்டு.. வேலைக்காரங்களைக் கூப்பிட்டு கன்னாபின்னான்னு கத்தறார்.. வேலைக்காரங்கதான் இந்தக் காரியத்தை செய்திருக்கனும்னு நினைச்சிட்டு அவங்களை வேலையை விட்டு அனுப்பிடறார்..

ஒரு இரவு.. அன்னேவும், நிக்கோலஸும் தன்னோட அப்பாவைத் தேடறேன்னு மாளிகையை விட்டு வெளியே போய் அந்த வேலைக்காரங்களைப் பற்றி ஒரு உண்மையைத் தெரிஞ்சுக்கறாங்க.. அதுக்கப்புறம் அந்த மாளிகையில நடக்கற மர்மமான விசயங்கள் கிரேஸுக்குத் தெரிய வருது..

இந்தப் படத்துல நிக்கோல் கிட்மேனோட ஆக்டிங்.. சான்ஸே இல்ல.. தி அதர்ஸ் பார்த்துட்டு.. நிக்கோல் கிட்மேன் நடிச்ச பெரும்பாலான படங்களை டவுன்லோட் பண்ணிப் பார்த்துட்டேன்.. அவ்வளவு ஃபேன் ஆயிட்டேன் அவருக்கு.. இந்தப் படத்துல நடிச்சதுக்காக நிக்கோல் கிட்மேனுக்கு சிறந்த நடிகைக்கான பல அவார்டுகள் கிடைச்சது..

இந்தமாதிரி ஒரு திரைக்கதையை அமைச்சதுக்கு இயக்குனருக்கு கண்டிப்பாக சல்யூட் அடிச்சே ஆகனும்.. படம் ஆரம்பித்தில இருந்து முடிவு வரை ஒரு பேயையும் காமிக்காமலே நம்மளை பயங்கரமா பயப்படுத்தியிருக்காங்க.. வேலைக்காரங்களா வர்றவங்களோட மர்மமான செய்கைகள் மேலும் கிலியை ஏற்படுத்தியது..

பியானோ இசை கேக்கற சீன்லையும், குழந்தைகள் அலர்ற சத்தம் கேட்டு கிட்மேன் ஓடறப்பவும்.. ஹார்ட்பீட்டை பயங்கரமா அதிகரிக்க வைச்சிருக்காங்க..

கோரமான பேய், அதுஇதுன்னு காட்டாம.. திரைக்கதையோட்டத்துலயும், பின்னணி இசை மூலமாகவும் ரொம்ப பயப்படுத்தியிருக்காங்க.. கதைக்குத் தோதான பிரமாண்டமான மாளிகை.. கிளைமாக்ஸ் சான்ஸே இல்ல.. அடப்பாவிகளான்னு நாம வாயைப் பிளந்து பார்க்கறது உறுதி.. படம் பார்க்கற ஐடியா இருந்தா.. இதோட கிளைமாக்ஸைப் பற்றி தெரிஞ்சுக்காமப் பாருங்க.. கண்டிப்பாக உங்களுக்கு இது ஒரு மிரட்டலான படமாக இருக்கும்..


Tuesday, December 7, 2010

வங்கியில் ஒரு நாள்


என்னுடைய ஊர் பழனி.. ஊர்ல எனக்கு ஒரு பேங்க் அக்கெளண்ட் கிரியேட் பண்ணிக்கிட்டா கொஞ்சம் வசதியா இருக்குமேன்னு.. போன மாதம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் அக்கெளண்ட் கிரியேட் பண்ணப் போயிருந்தேன்.. எங்க ஊரைச் சுற்றி நிறைய கிராமங்கள் இருக்கறதால.. அந்த கிராமங்களைச் சுற்றியிருக்கற நிறைய விவசாயிகள்தான் பேங்குல அக்கெளண்ட் வச்சிருக்காங்க..

அன்னைக்கு என்னோட வேலை எனக்கு ஒரு அகெளண்ட் கிரியேட் பண்ணனும்.. கிரியேட் பண்ணினதுக்கு அப்புறம் கொஞ்சம் பணத்தை என்னோட அக்கெளண்டுல போடனும்.. என் அப்பாவோட பாஸ்புக்கிற்கு என்ட்ரி போடனும்.. சாதாரணமா ஏதாவது ஒரு வேலையை செய்யனும்னாலே அரசாங்க வங்கிகள்ல பாதி நாள் போயிடும்.. எனக்கு மூன்று வேலை இருந்தது.. சரி இன்னைக்கு முழுக்க அங்கேதான் அப்படின்னு நினைச்சிட்டு.. தயாராகத்தான் போனேன்..

முதல்ல அகெளண்ட் கிரியேட் பண்ண ஃபாம் வாங்கிட்டு அதை ஃபில் பண்ணினேன்.. அப்போ சிலர் அந்த ஃபாமை ஃபில் பண்ணத் தெரியாம திணறிட்டு இருந்தாங்க.. அதுல ரெண்டு பேருக்கு.. ஃபில் பண்ணிக் கொடுத்தேன்.. ஃபாமை சப்மிட் பண்ணியாச்சு.. ஃபாமை வாங்கறவங்களுக்கு எதிர்த்தாப்புல ஒரு சின்ன பொண்ணு உட்கார்ந்திருந்தது.. ஸ்டேட் பாங்க் இப்பொதான் எங்க ஊர்ல கம்ப்யூட்டரைஸ்டு பண்ணியிருக்காங்க.. அதனால நாங்க கொடுக்கற ஃபாம்களை வாங்கி வைக்கறதுதான் அங்கே உட்கார்ந்து இருந்தவங்களோட வேலையா இருந்தது.. அக்கெளண்ட் கிரியேட் பண்ற வேலைகளை எல்லாம் அந்தப் பொண்ணே பார்த்துக்கிட்டது.. அங்கே ஃபாம் கொடுக்கறதுக்கே 2 மணிநேரம் காக்க வேண்டியிருந்தது.. மதியம் வாங்க கிரியேட் ஆயிருக்கும்னு சொன்னாங்க..

அடுத்த வேலை.. அப்பாவின் பாஸ்புக்கிற்கு எண்ட்ரி போடனும்.. கம்ப்யூட்டரைஸ்டு ஆக்கிட்டாலும்.. இன்னும் பாஸ்புக் குடுத்து நம்ம டிரான்சக்ஸன்களை எண்ட்ரி போடற சிஸ்டம்தான் ஃபாலோ பண்றாங்க.. அங்கே வரிசையில நிக்க ஆரம்பிச்சேன்.. அங்கே எண்ட்ரி பண்ணிட்டு இருந்தவர் பக்கத்துல ஒருத்தர் சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தார்.. அவர் கையில ஒரு 5,6 பாஸ்புக்குகளை எண்ட்ரி போட்டுக் குடுத்துட்டே இருந்தார் அங்கே வேலை செய்றவர்.. ஒருவழியாக அந்தாள் நகர.. எனக்கு முன்பிருந்த பையன் பாஸ்புக்கை உள்ளே நீட்டினான்.. கடந்த மூன்று மாசமாக எண்ட்ரி போடலயாம்.. நிறைய டிரான்சக்சன் ஆயிருக்கு.. அடிக்கடி வந்து எண்ட்ரி போடறதில்லையா அப்படின்னு கன்னாபின்னான்னு திட்ட ஆரம்பிச்சார் உள்ளே இருந்தவர்.. கூட்ட சமயமாக இருந்ததால.. அங்கே எல்லாரும் வேடிக்கை பார்க்க அந்தப் பையனுக்கு ரொம்ப அவமானமாக ஆயிடுச்சு.. கெளண்டர்ல இருந்தவர் தொடர்ந்து திட்டிக்கிட்டே இருக்க.. நான் ஏங்க இதுக்கு முன்ன நின்னு உங்ககிட்ட சிரிச்சு பேசிட்டு இருந்தவருக்கு ஒரு வருசத்துக்கு எண்ட்ரி போட்டமாதிரி இருந்தது.. இப்போ மட்டும் என்ன இந்தப் பையனை இவ்வளவு திட்டறீங்க.. உங்க வேலையை செய்ங்கன்னு சொன்னேன்.. உடனே அந்தாளுக்கு கோவம் வந்துடுச்சு.. உன் வேலையைப் பாருன்னு சொல்ல.. க்யூல நின்ன எல்லாரும் எனக்கு சப்போர்ட்டுக்கு வந்துட்டாங்க.. அதனால வேறவழியில்லாம பேசாம வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டார் அவர்..

ஒரு மணிநேரத்துல அந்த வேலையும் முடிஞ்சது.. 12 மணி ஆயிருந்தது.. அகெளண்ட் கிரியேட் ஆயிடுச்சான்னு.. அந்த உதவியாளர் பொண்ணுகிட்ட கேட்டேன்.. கிரியேட் பண்ணியாச்சுங்க.. மேடம் அங்கே பேசிக்கிட்டு இருக்காங்க.. வந்தவுடனே வாங்கிக்கிங்கன்னு சொல்லுச்சு பொண்ணு.. ஒன்னும் அஃபிசியலாக எல்லாம் பேசல.. அங்கே இன்னொரு கெளண்டர்ல போய் வெட்டி அரட்டை.. வரவே இல்லை.. அப்படியே சாப்பிட போயிட்டாங்க.. இனி 2 மணிக்குத்தான் வருவாங்கன்னு தெரியுமே.. நானும் வீட்டுக்குப் போய் சாப்பிட்டு வந்து ஒருவழியா பாஸ்புக்கையும் கையில வாங்கிட்டேன்..

இப்போ பணம் கட்டனும்.. டோக்கன் எடுத்துட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. அங்கே ஒரு பெரியவரை கேசியர் பயங்கரமாகத் திட்டிக்கிட்டு இருந்தாங்க.. கெளண்டருக்குப் பக்கத்துலதான் உட்காந்திருந்தால என்ன விசயம்னு புரிஞ்சது.. பெரியவர் 10, 20 ரூபாய் நோட்டுகளாக கொண்டு வந்திருக்காராம்.. அதை நான் எப்படி எண்ணுவது.. போய் மாத்திக் கொண்டு வாங்கன்னும்.. நீங்க ஸ்லிப் தப்பா ஃபில் பண்ணியிருக்கீங்கன்னும் திட்டிட்டு இருந்தாங்க.. நான் போய் ஏங்க இப்படி பெரியவரைத் திட்டறீங்க.. உங்க வேலையே அதுதானன்னு கேட்டால்.. இந்தக் கெளண்டரிலும் உங்க வேலையைப் பாருங்கன்னு பதில்.. அந்தப் பெரியவரிடம் சரிவாங்க நாம மேனேஜர் ரூம்ல போய்.. 10,20 ரூபாய் நோட்டெல்லாம் கேசியர் வாங்க மாட்டாங்களாம்.. அதனால் நீங்க வாங்கிக்கங்கன்னு சொல்லிக் கட்டிட்டு வரலாம்னு சொல்ல.. உடனே அந்தப் பெரியவரிடம் நோட்டுகளை வாங்கி வேலையை முடிச்சுக் கொடுத்துட்டாங்க.. என்னோட 3வது வேலையும் முடிஞ்சது..

கிராமப்புற மக்கள் அதிகமாக வர்ற பேங்க்காக இருக்கறதால.. ஜனங்களுக்கு அந்த ஸ்லிப்பை எல்லாம் ஃபில் பண்ணத் தெரியல.. என்னை மாதிரி வர்றவங்ககிட்ட தம்பி இதை ஃபில் பண்ணிக் கொடுப்பான்னு கெஞ்சிக் கேக்கறாங்க.. சிலர் தப்பா ஃபில் பண்ணிக் கொடுத்திட்டாலும் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிப் போகலாம் வேலை செய்றவங்க.. அங்கே வேலை செய்றவங்களுக்குத்தான் இருக்கற தலைவலி புரியும்னு நீங்க நினைக்கலாம்.. அப்படி ஒன்னும் விழுந்தடிச்சுக்கிட்டு வேலை செய்யலையே.. அவங்க பாட்டுக்கு ஹாயா.. வேலை செய்றாங்கதான்.. அதனால இந்தமாதிரி படிக்காதவங்ககிட்ட கடிஞ்சுக்கிறதைக் குறைச்சிக்கலாம்..

அங்கே ஒவ்வொரு கெளண்டர்ல இருக்கறவங்களுக்கும் என்னா கிராக்கி.. ஒரு பேப்பரை அந்தப் பக்கம் இருந்து இந்தப் பக்கம் எடுத்துக் கொடுக்கனும்னா.. ஒரு மணிநேரமாவது வெயிட் பண்ண வைக்கறாங்க.. பிரைவேட் பேங்குல இந்தத் தொல்லைகள் இருக்காது.. ஆனால் டெப்பாஸிட் பணம்னு சொல்லி அவங்க ஆளையே காலி பண்ணிடுவாங்க.. இங்கே அகெளண்ட் கிரியேட் பண்ண 500 ரூபாய் இருந்தால் போதுமானது.. செக்புக்கோட வேணும்னா 1000 கட்டனும்.. நமக்கு பிற்காலத்துல ஏதாவது லோன் வாங்கனும்னா.. செக்புக் இருந்தால்தான் ஆகும்.. அதனால அதையும் சேர்த்து வாங்கிக்கறதுதான் சரி..

இப்போ மேட்டர் என்னன்னா.. எனக்கு ஒரு வாரத்துல வீட்டுக்கு அனுப்பறதாக சொல்லியிருந்த செக்புக்கை ஒரு மாசம் ஆனதுக்கு அப்புறமும் அனுப்பல.. கேட்டால் நீங்க செக்புக்குக்கு இனி தனியா எழுதிக் கொடுக்கனும்னு சொன்னாங்க.. அடுத்த முறை போனா.. நீங்க எழுதிக் கொடுத்த ஃபாமே இல்ல.. திரும்பவும் எழுதிக் கொடுங்கன்னு சொன்னாங்க.. இன்னும் செக்புக் வந்து சேரல.. இதெல்லாம் எனக்குத் தேவையா.. போனோமா.. வேலையை முடிச்சிட்டு வந்தோமான்னு இல்லாம நியாயம் கேட்டதுக்கு இப்படி ஒரு தண்டனை.. இனி எத்தனை முறை அலைய விடுவாங்களோ தெரியல..

Monday, December 6, 2010

பெங்களூரில் ஒரு ஃபிளை "ஓவர்" - மறுபக்கம்

பெங்களூரில் ஒரு ஆண்டுக்கு முன்பு 11 கிலோமீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்ட ஒரு ஃபிளை ஓவரைப் பற்றி.. "பெங்களூரில் ஒரு ஃபிளை "ஓவர்"" என்ற பதிவில் முன்பு விவரித்திருந்தேன்.. பெங்களூரில் இருந்து ஒசூர் செல்லும் சாலையில் இந்தப் பாலம் அமைஞ்சிருக்கு..

இந்தப் பாலம் கட்டப்பட்டதோட நோக்கம் இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதே.. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.. ஓசூர் சாலையில் உள்ள பொம்மனஹல்லி மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி மாதிரியான பகுதிகளினுள் அதிகமாக வாகனங்கள் சென்று வருவதே..

சரி இந்தப் பாலம் கட்டியாகி விட்டது.. இப்போது இங்கு போக்குவரத்து நெரிசல்கள் குறைந்துள்ளதா என்றால் அது இல்லைன்னுதான் சொல்லனும்.. காரணம் என்னன்னா.. இந்த பாலம் ஆரம்பிக்கறதே நான் முன்பு குறிப்பிட்ட பொம்மனஹல்லிங்கற பகுதிக்கு முன்னாடி இருக்கற ஸ்டாப்பிங்லதான்.. அதனால அந்தப் பகுதிகளுக்குள்ள போகவேண்டிய வாகனங்கள் நேராக ஓசூர் சாலையில போகவேண்டிய வாகனங்களை மறிச்சு போயிக்கிட்டுதான் இருக்கு.. அதுபோலவே.. இந்த பாலம் முடிவடையறதும்.. எலக்ட்ரானிக் சிட்டி தாண்டிதான்..

இந்தப் பாலத்துக்கு நடுவுல மொத்தம் ஏழு ஸ்டாப்பிங் இருக்கு.. அதுல ஒரே ஒரு ஸ்டாப்பிங் தவிர மற்ற இடங்கள் எல்லாவற்றிலுமே.. மக்கள் அதிகமாக ஸ்டே பண்ணியிருக்கிற ஏரியாதான்.. அதனால இந்தப் பாலத்தை இவங்களால பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுட்டுச்சு..

இங்கே எலக்ட்ரானிக் சிட்டியில இருக்கற பெரும்பாலான சாஃப்ட்வேர் கம்பெனிகளுக்கு அவங்களோட வாகனங்கள் வர்றது எப்படியும் ஆயிரத்தை மீறும்.. அதனால அந்த நிறுவனங்கள் எல்லாம் இந்தப் பாலத்தை பயன்படுத்தறாங்களான்னா அதுவும் இல்லை.. குறிப்பிட்ட ஒரே ஒரு நிறுவனத்தைத் தவிர..

காரணம் இந்தப் பாலம் பே அண்ட் யூஸ் டைப்.. காரணம் இதுதானான்னு சரியாகத் தெரியல.. ஆனால் எப்போதும் போல அந்த கம்பெனி வண்டிகள் எல்லாம்.. சாலையைத்தான் பயன்படுத்தறாங்க..

சரி ஊருக்குப் போறதுக்காகவாவது இந்தப் பாலம் யூஸ் ஆகுதான்னா அதுவும் இல்ல.. அரசாங்க பேருந்துகள் யூஸ் பண்ணாததுக்கு காரணம் நான் மேல சொன்ன மாதிரி பாலத்தை யூஸ் பண்ணினா பணம் கொடுக்கனும்னுதான்.. ஓசூர் சாலையில ஒவ்வொரு பிரைவேட் பஸ்களுக்கும் பிரான்ச் இருக்கறதால.. அங்கே நிக்கறவங்களை பிக்கப் பண்ணிக்கனும்னு அவங்களும் யூஸ் பண்றதில்லை..

எப்பவும் போல மக்கள் அவதிப்பட்டுட்டேதான் இருக்காங்க.. என்னைப் போன்று இந்தப் பாலம் முடிவடையற இடத்துல இருக்கறவங்களும் இந்தப் பாலத்தை யூஸ் பண்றதில்லை.. காரணம் ஒரு நாளைக்கு அப் அண்ட் டவுன் இந்தப் பாலத்தை யூஸ் பண்ணினா 20 ரூபாயும், ஒரு வழிப் போக்குவரத்துக்கு யூஸ் பண்ணினா 15 ரூபாயும் செலவாகுது.. ஒரு மாசத்துக்கு யூஸ் பண்ணனும்னா.. இதுக்காகவே தனி பட்ஜெட் ஒதுக்க வேண்டியிருக்கு.. எப்பவாவது சீக்கிரம் வீட்டுக்குப் போகனும்னு இந்தப் பாலத்தை யூஸ் பண்ணுவேன்.. ஒவ்வொரு முறையும் எத்தனை வண்டிகளைக் கிராஸ் பண்றேன்னு எண்ணிக்கிட்டே வருவேன்.. ஒருமுறைகூட பத்து வாகனங்களைத் தாண்டினது இல்ல..

சுமார் இரண்டு ஆண்டுகள் இந்தத் திட்டம் நடந்துச்சு.. அந்த சமயங்கள்ல இங்கே இருக்கற மக்கள் பட்ட அவஸ்தை கொஞ்சம் நஞ்சமல்ல.. சூழ்நிலை சீர்கேடு, டிராபிக்குன்னு நிறைய அவஸ்தைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது.. இப்பவும் அதேநிலைதான் தொடருது..

பெங்களூர்.. அதிகமாகப் பாலங்கள் கட்டப்பட்டுள்ள நகரம்.. போக்குவரத்து நெரிசல்தான் காரணம்..

ஓசூர் சாலையிலும் பிரச்சினைக்குரிய இடங்களான பொம்மனஹல்லியிலும், எலக்ட்ரானிக் சிட்டியிலும் சிறிய பாலங்களை அமைச்சிருந்தாலே.. அவங்கவங்க.. எந்த பிரச்சனையும் இல்லாம பயணம் செய்திருக்க முடியும்.. ஒரே ஒரு நிறுவனம் பயனடையறதுக்காக இந்தப் பாலத்தை அமைச்சிருக்காங்கன்னா அது எவ்வளவு பெரிய மோசம்..

போக்குவரத்து நெரிசல் உண்டாகற இடங்கள்ல என்னைப் போல பைக் வைச்சிருக்கறவங்களும்.. ஆட்டோக்காரங்களும் பண்ற சர்க்கஸ் இருக்கே.. பாதசாரிகளுக்கு அதெல்லாம் கடுப்பாகத்தான் இருக்கும்.. வேற வழியில்ல.. விக்ரம் மாதிரி லைன்கட்டி வந்திட்டு இருந்தா.. நைட் பத்து மணிக்குத்தான் வீடு வந்து சேரமுடியும்.. ஏதாவது ஸ்பெசல் பவர் இருந்தா.. பில்டிங் மேலயே வண்டி ஓட்டிட்டு வந்திடலாம்னு தோனுது..

வெகுஜனத்திற்கு தொல்லை கொடுத்து.. கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..


Sunday, December 5, 2010

என்றும் நட்புடன் - பாபு

பிளாக்ஸ் படிக்க ஆரம்பிச்சு சுமார் 6 மாசம்தான் ஆகுது.. ஆக்சுவலா பதிவுலகம் இருக்கறதே எனக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் தெரியும்.. திரை விமர்சனங்கள் படிக்கறதுக்காக படப்பெயரைத் தேடறப்போ பிளாக்ஸ் கிடைச்சது.. அப்படியே படிக்க ஆரம்பிச்சேன்.. அப்புறம் அதுவே பழக்கமாயிடுச்சு.. அப்படிப் படிக்கறப்போ பதிவுலக நண்பர்கள் 50 வது பதிவு, 100 வது பதிவு அப்படின்னு போஸ்ட் போட்டிருப்பாங்க.. என்ன பெரிய 50,100னு படத்துல நடிக்கற மாதிரியில விளம்பரப்படுத்திட்டு இருக்காங்க.. அப்படின்னு நினைச்சுப்பேன்.. ஆனால் 50 பதிவுகள் எழுதினதுக்கு அப்புறம்தானே தெரியுது அதுல இருக்கற சந்தோசமே..

பதிவுகள் படிச்சுட்டு இருந்து ஒரு மாசத்துக்குள்ளாகவே எல்லாருக்கும் மாதிரி எனக்கும் ஆசை வந்து.. நானும் பதிவு எழுதத் தொடங்கிட்டேன்..

முன்ன எல்லாம் கால்ரேட்ஸ் ரொம்ப அதிகமாக இருக்கப்போ.. பசங்க எல்லாம் மெயில் பண்ணுவானுங்க.. போன் பேசறது மலிவானதுக்கு அப்புறம் எல்லாம் யார் மெயில் பண்ணிட்டு இருக்கா.. எனக்கு நண்பர்கள்கிட்டயிருந்து பெர்சனல் மெயில்ஸ் வந்தே ஒரு 3 வருசம் இருக்கும்.. அதுக்கப்புறம் நிறைய ஃபார்வேர்டு மெயில்கள் வந்திட்டு இருக்கும்.. மொபைல்ல இருந்தே மெசேஜஸ் அனுப்பறது வாடிக்கையானதுக்கு அப்புறம் நிறைய ஸ்பம் மெயில்ஸும்.. வேலை தேடறப்போ நாக்ரி மாதிரியான சைட்கள்ல இருந்து ஜாப் ஓப்பனிங்ஸ் மட்டும்தான் வந்திட்டு இருக்கும்..

இப்போ தினமும் எக்கச்சக்கமான மெயில்கள்.. நண்பர்களோட பதிவுகளைப் படிச்சுட்டு ஃபாலோஅப் பண்ணிட்டு வந்திட்டு.. அவங்களுக்கு வர்ற கமெண்டுகளைப் படிச்சு.. அதுக்கு திரும்ப ரிப்ளை பண்ணிக்கிட்டுன்னு ஒரு புதிய அனுபவமாயிருக்கு.. இந்த அனுபவத்தைக் கொடுக்கற பதிவுலக நண்பர்களுக்கு எனது நன்றிகள்..

முதல்ல தைரியமாக எல்லாம் பதிவு எழுத ஆரம்பிச்சுடல.. ரமேஷ் (பிரியமுடன் ரமேஷ்) எப்பவும் பதிவுகள் படிச்சுட்டே இருப்பார்.. எதையோ படிச்சுட்டு இருக்கார்னு கண்டுக்கவே இல்ல.. ரெண்டு பேரும் மதராசப்பட்டினம் படம் பார்த்துட்டு வந்துட்டு அதைப் பற்றிய விமர்சனத்தை எழுதனும்னு.. அன்னைக்கே ஒரு பிளாக் கிரியேட் பண்ணி.. விமர்சனமும் எழுதி போஸ்ட் பண்ணிட்டார்.. ரொம்ப சந்தோசமா இருந்தது.. அட நம்ம கூடவே ஒரு பிளாக்கரா.. அப்படின்னு ஆச்சரியமா இருந்தது.. அப்புறம் கொஞ்ச நாள்ல உனக்கும் ஒரு பிளாக் கிரியேட் பண்ணிட்டேன்.. நீ கண்டிப்பா எழுதனும்.. அப்படின்னுட்டார்.. சரி ரொம்ப தொல்லை பண்றாரேன்னு ஒரு அறிமுகத்தை மட்டும் கொடுத்துட்டு கலண்டுக்கலாம்னு நினைச்சேன்.. ஆனால் அதுக்கு ஒரு பத்து கமெண்ட் வந்ததுன்னு நினைக்கிறேன்.. வாழ்த்துக்கள்.. வரவேற்கிறோம்னு.. ஒருமாதிரி ஜிவ்வுன்னு இருந்தது.. எதாவது எழுதனும்னு நானும் எழுத ஆரம்பிச்சிட்டேன்..

பதிவுகள் எழுதறதுக்கு முன்னாடி ரமேஷ்.. எனக்கு ஏதாவது கவிதைகள்.. கதைகள் எழுதிக் காமிச்சுட்டே இருப்பார்.. இந்தப் பதிவே ரமேஷ்னாலதான் எழுத ஆரம்பிச்சேன்.. அதனால நண்பர்கள் தினத்திற்கு அவர் எனக்கு எழுதிய கவிதை ஒன்றை இங்கே பப்ளிஷ் பண்றேன்..

நண்பன் இல்லாத வாழ்க்கை
நரம்புகளற்ற வீணைக்கு சமம்
நரம்பில்லாத வீணை
விறகிற்கு சமம்

நான் விறகாய் எரிந்துவிடாமல்
வீணையாய் மாற்றிய நண்பனே
உனக்காய் நான் தருவேன்
என்னிடம் இருக்கும்
மகிழ்வான ராகங்களை
இதுல முதல்ல வர்ற நாலு லைன் ஒரு பழைய ஆனந்த விகடன்ல ரமேஷ் படிச்சாராம்.. அப்போ நண்பர்கள் தினமா இருந்ததால.. அடுத்து வர்ற ஐந்து வரிகளை எழுதி எனக்குக் கொடுத்தார்.. மெமரபில் ஒன்..

என்னுடையப் பதிவுகளைப் படிச்சு.. ஓட்டுகள், கருத்துகளிட்டும்.. வாசித்தும் ஆதரவளிச்சுட்டு இருக்கற நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்..


Friday, December 3, 2010

சிக்கு புக்கு - கொரியன் இரயில்

இந்தப் படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துலயே தெரிஞ்சு போச்சு முழுக்கதையும்..

ஆர்யாவும், ஸ்ரேயாவும்.. லண்டன்ல இருக்காங்க.. ரொம்ப ஸ்டைலிஸான கேரக்டர்ஸ்.. ஆர்யா, ஸ்ரேயாவோட அறிமுகக் காட்சிகளைப் பல படங்கள்ல பார்த்தாச்சு.. ரெண்டு பேரும் சில காரணங்களால இந்தியாவுல அவங்க சொந்த ஊருக்கு வரவேண்டியிருக்கு.. அப்போ ஏதேச்சையா இரண்டு பேரும் சந்திச்சு.. சண்டை போட்டுக்கிட்டு.. இரயில்ல இருந்து இறக்கிவிடப்பட்டு.. அப்புறம் லாரி, பஸ், சைக்கிள்னு அவங்க ஊருக்குப் பயணப்படறாங்க.. அப்போ ரெண்டு பேருக்குள்ள நடக்கற சண்டைகளை கமெடியாகக் காமிக்க முயற்சி பண்ணியிருக்கார் இயக்குனர்..

இந்தப் பயணத்தின் போது ஆர்யா தன்னோட அப்பாவோட டைரியைப் படிக்கறார்.. அந்த பிளாஸ்பேக் காட்சிகள்தான் இடைவேளை வரைக்கும் நமக்கு ஆறுதல்.. பிளாஸ்பேக்குல ஆர்யாவோட அப்பா ஆர்யாவின் காதல் கதை.. ஆர்யா போலீஸாகறதுக்கு எக்ஸாம்ல பாஸ் பண்ணிட்டு ஊருக்கு வர்றார்.. அங்கே பள்ளிக்கூட வாத்தியார் மகளை லவ் பண்றார்.. அவங்களும் ஆர்யாவை லவ் பண்றாங்க.. ஆர்யா வீடு ஊர்லயே பெரிய பணக்காரங்க.. அதனால ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடிப்போறதா முடிவு பண்றாங்க.. ஆனால் ஆர்யா குறிப்பிட்ட நேரத்துக்கு அவங்க வராததால.. தன்னோட போலீஸ் ட்ரைனிங்கைத் தொடர்றதுக்காக கிளம்பிடறார்..

போலீஸ் ட்ரைய்னிங் கேம்ப்ல ஒருத்தர் நண்பர் ஆகறார்.. அவர் தன்னோட அத்தை பொண்ணை லவ் பண்றார்.. ஆர்யாவோட லவ்வர் படிக்கறேன்னு சொல்லிட்டு.. அவரைத் தேடி அங்கே வந்திடறார்.. இதுல இருந்தே ரெண்டு பேரும் லவ் பண்றது ஒரே ஆளைத்தான்னு தெரிஞ்சு போயிடுது.. ஆர்யா விட்டுக் கொடுத்திடறார்.. அவங்க ஸ்டோரி ஓவர்..

பிரசண்ட்ல.. சண்டை போட்டுட்டு இருந்த ஆர்யாவும்.. ஸ்ரேயாவும் நண்பர்கள் ஆயிடறாங்க.. ஒரு வழியா ஊர் வந்து சேர்ந்திடறாங்க.. ஸ்ரேயாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கார் அவரோட அப்பா.. மாப்பிள்ளை வந்து பார்க்கற வரைக்கும் ஸ்ரேயாவுக்கு ஆர்யா மேல இருக்கற காதல் இருக்கறது தெரியல... ஒரு செகண்ட்ல காதல் வந்துடுது.. சேர்ந்திடறாங்க.. படம் முடிஞ்சது..

ஜீவாவோட அசிஸ்டெண்ட் மணிகண்டன் இயக்கிய படம்கறதாலவும்.. ஆர்யா மேல இருக்கற நம்பிக்கையாலும்.. படத்துக்குப் போயாச்சு.. டிராமா ஆர்டிஸ்ட்ஸ் நடிக்கற மாதிரி அவங்க அவங்க டயலாக் வர்ற சமயத்துல மட்டும் நடிச்சுட்டு எல்லாரும் அமைதியா இருந்திடறாங்க.. ஸ்ரேயா ரொம்ப ஓவர் ஆக்டிங்..

இயக்குனர் நடிகர்கள்கிட்ட சரியான நடிப்பை வாங்கத் தவறிட்டார்.. காட்சிகளுக்குத் தேவையான பலத்தைக் கொடுக்கல.. ஏதோ ஒரு காட்சிக்கு அப்புறம் இன்னொரு காட்சி.. அப்புறம் இன்னொன்னு காட்சிகள் நகர்ந்து போகுது.. இடைவேளைக்கு முன்பு படத்தோட மிகப்பெரிய பலமா இருந்த பிளாஸ்பேக் காட்சிகளும் இடைவேளைக்கு அப்புறம் போரடிக்க ஆரம்பிச்சிடுது..

படத்தோட குறைகள்ல.. பெரிய குறை பின்னணி இசைதான்.. முக்கியமான காட்சிகள்ல சப்பையான பின்னணி இசையைப் போட்டு பிரவீன்மணி காட்சிகளோட வேல்யூவை ரொம்பக் குறைச்சிட்டார்.. ஹரிஹரனோட பாடல்கள் எதுவுமே தேறல.. 

ஸ்ரேயாவை விட பிளாஸ்பேக்குல வர்ற கதாநாயகிக்கு நல்ல வெயிட்டான கேரக்டர்.. அவர் முகமும் சரி.. நடிப்பும் சரி படத்துக்கு ஒட்டவே இல்ல.. வேற யாராவது சாந்தமான முகம் இருக்கற பொண்ணைப் போட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும்.. தன்னொட நண்பனோட அத்தை பொண்ணுதான் தன்னோட காதலின்னு தெரிஞ்சுக்கிட்டு அவரோட பேசறதைப் பார்க்கறதைத் தவிர்க்கறார் ஆர்யா.. அப்புறம் சில காட்சிகளுக்கு அப்புறம் போய் பார்க்கப் போறார்.. அவர்கிட்ட என்னமோ ரொம்ப நாளாக் கடைக்கு வராத கஸ்டமர்கிட்ட கேக்கறமாதிரி ஏன் என்கிட்ட பேசலன்னு உணர்ச்சியே இல்லாம பேசறாங்க.. அவரோட நடிப்பு முழுக்க அப்படித்தான் இருக்கு.. கூட ஆர்யா இருக்கறதால அவர் வர்ற காட்சிகள் எல்லாமே ஒப்பேறிருது..

சந்தானம் சில காட்சிகள்ல வந்து சிரிக்க வைக்கனும் ட்ரை பண்றார்.. அவர் வர்ற ஒன்னு ரெண்டு காட்சிகள் நல்லாயிருக்கு.. படத்துல அவர் கேரக்டர் ஒட்டவும் இல்ல.. தேவையும் இல்ல.. அவரும் நடிக்கனும் நடிக்க வைச்சிருக்காங்க..

பிளாஸ்பேக் காட்சிகள்ல வர்ற ஆர்யாவோட கதையும் கிளைமாக்ஸ்ல வர்ற திருப்பமும்.. கிளாஸிக்னு ஒரு கொரியன் திரைப்பத்தோட கதை.. முதல் படத்துலயே காப்பி அடிக்கனுமா..

படம் பார்க்கறப்போ உங்களுக்கு ஆர்வம் குறையாம இருக்கனும்ங்கறதுக்காக படத்தோட முக்கியமான விசயத்தை நான் இங்கே சொல்லல.. ஏன் டைரக்டர்கூட அதை ஒரு பெரிய விசயமாகவே சொல்லல.. படம் முடிய நேரமாச்சேன்னு அவசர அவசரமா காட்சிகளை எடுத்தமாதிரி இருக்கு.. டிக்கெட் காசுக்கு ஒர்த் இல்ல படம்.. எந்த எக்ஸ்பெக்டேசனும் இல்லாம போனாலும் முன்னாடியே கிளாஸிக் படத்தைப் பார்க்காம இருந்தாலும் கொஞ்சம் பார்க்கலாம்னு நினைக்கறேன்..

ஏற்கனவே வந்த ஒரு அற்புதமான காதல் படத்தைப் பார்த்து எடுத்தும்.. இந்தப் படத்தை நன்றாக எடுக்காம விட்டுட்டார் இயக்குனர்.. உயிரோட்டமே இல்லாமல்..

கிளாஸிக் = சிக்கு புக்கு கிளாஸிக்


ஹேங்ஓவர் - மப்பு கலைஞ்சதுக்கு அப்புறம்..

ஹேங்ஓவர் 2009 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் திரைப்படம்..

பில், டக், ஸ்டூ, மாப்பிள்ளை டக்கோட மச்சினன் ஆலன்.. இந்த 4 பேரும்தான் படத்தோட ஹீரோ.. நாலு பேருன்னு சொல்றதை விட இதுல ஆலன்தான் ஹீரோன்னு சொல்லலாம்.. படத்துல நகைச்சுவையில கலக்கியெடுத்தவர் இவர் தான்.. பேச்சுலர் பார்டி கொண்டாடப் போன நாலு பேரும்.. தன்னியடிச்சுட்டு.. ஹேங்ஓவராகி மாப்பிள்ளையைத் தொலைச்சுட்டு.. அவரைத் தேடறதுதான் முழுக்கதையும்.. பஞ்சதந்திரம் மாதிரி சிரிச்சு சிரிச்சு.. வயிறு வலிக்க ஆரம்பிச்சுடும்.. படம் ஆரம்பத்துல இருந்து முடிவு வரைக்குமே ஒவ்வொரு சீனுக்கும் சிரிச்சுட்டேதான் இருப்போம்..

ஹீரோஸ் 4 பேரும் பேச்சுலர் பார்டி கொண்டாடறதுக்காக வேகாஸ் போறாங்க.. டக்கோட மாமனார் அவரோட காஸ்ட்லியான காரை அவங்களுக்கு கொடுத்து வழியனுப்பி வைக்கறார்.. டக்கோட மச்சினன் ஆலன் கொஞ்சம் மறை கலண்டவர் மாதிரி இருக்கார்.. ரொம்ப இன்னோசன்ட் கேரக்டர்.. அவரையும் அவங்க ட்ரிப்புல சேர்த்துட்டு கிளம்பறாங்க.. வேகாஸ்ல நான்கு பேரும் ஒரு பெரிய ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கி தங்களோட தண்ணி பார்டியை ஆரம்பிக்கறாங்க.. அவ்வளவுதான்..


அடுத்தநாள் காலையில எல்லோரும் மெதுவா கண்ணு முழிச்சு பார்க்கறப்போ.. அந்த ஹோட்டல் ரூமே நாஸ்தியாகிக் கிடக்குது.. பில், ஸ்டூ, ஆலன் மட்டும்தான் ஹோட்டல் அறையில இருக்காங்க.. மாப்பிள்ளை டக்கைக் காணோம்.. மூன்று பேருக்கும் முன்னாடி நைட் என்ன நடந்ததுன்னு சுத்தமா ஞாபகம் இல்லை.. கண்ணாடில தன்னோட முகத்தைப் பார்க்கற ஸ்டூவுக்கு பயங்கரமான அதிர்ச்சி..

அவரோட பல் ஒன்னைக் காணோம்.. பில்லோட முகம், கையில ஆஸ்பத்திரிக்குப் போய் கட்டுப்போட்ட பிளாஸ்திரி இருக்கு.. ஆலனோட பாக்கெட்டுல ஸ்டூவோட பல் இருக்கு.. புலம்பிக்கிட்டே பாத்ரூமுக்கு போற ஸ்டூ அலறி அடிச்சுக்கிட்டு ஓடி வர்றார்.. என்னன்னு போய் பார்த்தா பாத்ரூம்ல ஒரு புலி இருக்கு.. என்னடா இதுன்னு 3 பேரும் குழம்பி நின்னுட்டு இருந்தா.. அங்கே இருக்கற கப்போர்டு ஒன்னுல இருந்து குழந்தை அழுகற சத்தம் கேக்குது.. திறந்து பார்த்தால் உள்ளே ஒரு குழந்தை.. எல்லாரும் பயங்கர அதிர்ச்சியாயிடறாங்க.. ஒருத்தருக்கும் முந்தைய இரவு என்ன நடந்ததுன்னு துளிகூட ஞாபகம் இல்லை..

முதல்ல மாப்பிள்ளை டக்கைத் தேடுவோம்னு.. அந்தக் குழந்தையைத் தூக்கிட்டு ஹோட்டலை விட்டு வெளியே வர்றாங்க.. அங்கே ஒரு கூட்டம் மேலே அன்னாந்து பார்த்துக்கிட்டு நின்னுட்டு இருக்கு.. என்னன்னு பார்த்தா.. அவங்களோட அறையில இருந்த ஒரு பெட்.. வெளியில இருந்த ஒரு பெரிய சிலை மேல தொங்கிட்டு இருக்கு.. ஹோட்டல் சர்வண்ட்.. உங்களோட காரை எடுத்து வர்றேன் சார்.. கார் சாவி குடுங்கன்னு கேட்டு வாங்கிட்டுப் போய்.. காரை எடுத்துட்டு வர்றார்.. அவங்களுக்கு மேலும் அதிர்ச்சி.. அது ஒரு போலீஸ் கார்.. அதோட கார் சாவியைத்தான் இவங்க வைச்சிருந்தாங்க.. அப்போ அவங்களோட கார் என்னாச்சு..

காரைக் காணோம்.. ஒருத்தரோட பல்லைக் காணோம்.. பாத்ரூம்ல புலி இருக்கு.. ஒரு குழந்தை இருக்கு.. அவங்க அறையிலிருந்து பெட்.. ஹோட்டல் வெளியே உயரத்துல இருக்கற ஒரு சிலை மேல தொங்கிட்டு இருக்கு.. இதெல்லாம் எப்படி நடந்தது.. அவங்களுக்கு ஒரு குளுவுமே இல்ல.. இதுக்கு மேல அடுத்த நாள் கல்யாணம் பண்ணிக்கப்போற மாப்பிள்ளையையே காணோம்.. கல்யாணத்துக்கு முன்னாடி அவரையும் கண்டுபிடிக்கனும்.. மண்டையைப் பிச்சிக்கிட்டு நின்னுட்டு இருப்பாங்க.. மூன்று பேரும்..

குழம்பிக்கிட்டே காரை ஓட்டிட்டு போயிட்டு இருக்கப்போ.. கார் டிக்கியில இருந்து சத்தம் கேக்கும்.. திறந்து பார்த்தால்.. ஒரு ஆள் உள்ளே இருந்து வந்து பில்லை செமத்தியா அடிச்சுட்டு ஓடிப் போயிடுவான்.. அவன் எப்படி காருக்குள்ள வந்தான்.. அட்டகாசமான நகைச்சுவைக் காட்சிகள் மூலமா அவங்க மூன்று பேருக்கும்.. நமக்கும் மர்மங்களை அவிழ்த்திருப்பாங்க..

இதுல ஆலனோட நடிப்புதான் டாப்.. ரொம்ப சீரியஸா இருக்கமாதிரியே நடிச்சு.. நம்மளை பயங்கரமாக சிரிக்க வைச்சிருக்கார்.. அந்தக் குழந்தையைப் பற்றிய மர்மமும்.. புலி எப்படி வந்ததுன்னு தெரிய வர்றப்பவும் சான்ஸே இல்ல.. நகைச்சுவையில பின்னியிருப்பாங்க எல்லாரும்.. நகைச்சுவையில இவங்களுக்கு உதவிய மைக் டைசனும் வந்து சீரியஸா நடிச்சுட்டுப் போயிருக்கார்.. இதுல மாப்பிள்ளையா வர்ற டக்தான் பாவம்.. கடைசியில எல்லாம் மர்மங்களும் அவிழ்ந்து கரெக்டாக கல்யாணத்தை அட்டென் பண்ணப் போயிடுவாங்க..

கடைசி சீன்ல அவங்ககிட்ட இருக்கற கேமராவுல.. அன்னைக்கு நைட் என்ன நடந்ததுன்னு போட்டோக்கள் பதிவாகியிருக்கும்.. அட்டகாசம்..

வயிறு குலங்க சிரிச்சுப் பார்க்க ஏற்ற படம்..